Home Blog Page 6

எங்கள் ஆயுத பலத்தை அழித்துவிட்டதாக எண்ண வேண்டாம்: ட்ரம்புக்கு ஈரான் பதிலடி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது தெரிவித்த கருத்துகளுக்கு ஈரான் ராணுவம் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது.

அமெரிக்கா நிரந்தர அவமானத்தை சந்திக்கும் வரை தற்போதைய போர் நீடிக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரான் அரசு ஊடகமான பிரஸ் டிவியில் கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், ‘எங்கள் ராணுவ ஆற்றல் மற்றும் எங்கள் ஆயுதங்கள் குறித்த அமெரிக்காவின் உளவுத் தகவல் முழுமையற்றது.

எங்களின் உண்மையான ஆற்றலைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது. எங்களின் முக்கியமான ஏவுகணை உற்பத்தித் தளங்கள், நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்கள், நவீன வான் பாதுகாப்பு அமைப்புகள், மின்னணுப் போர் மற்றும் சிறப்பு ஆயுதங்களை நீங்கள் அழித்துவிட்டதாக எண்ண வேண்டாம்.

அத்தகைய அனுமானங்கள் நீங்கள் சிக்கியுள்ள சகதியை மேலும் ஆழமாக்கும். நீங்கள் தாக்கியதாக நினைக்கும் எங்கள் தளங்கள் முக்கியமற்றவை; எங்களின் முக்கிய ராணுவ உற்பத்தி, உங்களுக்குத் தெரியாத மற்றும் உங்களால் ஒருபோதும் அடைய முடியாத இடங்களில் நடைபெறுகிறது.

எங்களின் ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் ஆயுத தளங்களை அடைய நீங்கள் முயற்சி செய்ய வேண்டாம்; நீங்கள் தவறாகவே அதனை கணிப்பீர்கள். உங்களால் எதையும் சாதிக்க முடியாது.
எங்கள் கண்ணியமிக்க, அன்புக்குரிய, முஸ்லிம் தேசத்துக்கு எதிராக நீங்கள் தொடங்கிய போருக்கு நீங்கள் விலை கொடுக்க வேண்டும். நீங்கள் நிரந்தர அவமானத்தையும், வருத்தத்தையும், சரணடைதலையும் சந்திக்கும் வரை இந்தப் போர் தொடரும்.

நீங்கள் ஏற்கெனவே பெற்ற கடுமையான அடிகளின் தொடர்ச்சியாக, எங்களிடமிருந்து மேலும் பேரழிவை ஏற்படுத்தும் தாக்குதல்களை எதிர்பார்க்கலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதம் அல்-அன்பியா தலைமையகம் என்பது ஈரானின் கட்டளையிடும் மிக முக்கிய அமைப்பாகும். இது ஈரான் ராணுவம் மற்றும் இஸ்லாமியப் புரட்சிகர காவல் படை ஆகியவற்றுக்கு இடையேயான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறது.

முன்னதாக நாட்டு மக்களுக்கு ட்ரம்ப் ஆற்றிய உரையில், “ஈரானுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் தீர்க்கமான தாக்குதல்களை நடத்தியது. இந்த ராணுவ நடவடிக்கையின் முக்கிய நோக்கம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இப்போது ஈரானின் கடல்சார் மற்றும் வான்வழித் திறன்கள் முறையாகச் சிதைக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் பரந்த அளவிலான ராணுவக் கட்டமைப்பும் கடுமையாகப் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டின் பெரும்பாலான தலைவர்கள் தற்போது கொல்லப்பட்டுவிட்டனர்.

இந்த தாக்குதலில் ஈரானின் ஆயுதத் தொழிற்சாலைகளும், ராக்கெட் ஏவுதளங்களும் துண்டு துண்டாகச் சிதறடிக்கப்பட்டு வருகின்றன.அவற்றில் மிகச் சிலவே எஞ்சியுள்ளன. அமெரிக்கா முன்னெப்போதையும் விடப் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்று வருகிறது” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

ஐ.எம்.எப். பிரதிநிதிகள், ஜனாதிபதி சந்திப்பு!

இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் கீழ் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினர் இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்.

இதன்போது, நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளின் தற்போதைய நிலை குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், அண்மைக்கால பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் தற்போது அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதியுடன் பிரதிநிதிகள் குழுவினர் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கை அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளின் பாராட்டைப் பெற்றது. குறிப்பாக, பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைதல், வருமானத்தை முறையாக முகாமைத்துவம் செய்தல் மற்றும் வெளிநாட்டு கையிருப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம், நாட்டின் பொருளாதாரம் முன்னைய நிலையுடன் ஒப்பிடுகையில் அதிக தாங்கும் திறன் கொண்ட பொருளாதாரமாக மாறியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அடைந்துள்ள பொருளாதார ஸ்திரத்தன்மையை முன்னெடுத்துச் செல்வதோடு, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்துடன் எதிர்வரும் காலங்களில் செயற்படும் முறைமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள வெளிப்புற சவால்களுக்கு மத்தியில், எரிபொருள் விலை மற்றும் வலுசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை முகாமைத்துவம் செய்வதற்குத் தேவையான வேலைத்திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளதாக இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் பாதிப்புகளையும் குறைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

இந்த வெளிப்புற சவால்களுக்கு மத்தியிலும், அடைந்துள்ள பொருளாதார வளர்ச்சியைப் பேணிக்கொண்டு, இந்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்வதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்கள் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகளின் பாராட்டைப் பெற்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்பாட்டுத் தலைவர் Evan Papageorgiou உட்பட அதன் பிரதிநிதிகளான Martha Woldemichael, Enrique Flores Curiel,Dinar Prihardini, Ursula Wiriadinata, Ozlem Aydin, Yorbol Yakhshilikov, Klakow Akepanidtaworn மற்றும் மானவி அபேவிக்ரம ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.எம்.ஆர்.டி. அபோன்சு,இலங்கை மத்திய வங்கியின் பணிப்பாளர் எஸ். ஜெகஜீவன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

 

மலையக மக்களின் காணி பிரச்சினை குறித்து ஆராய்வு!

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவைச் சந்தித்தனர்.

மலையக மக்கள் எதிர்கொள்கின்ற கல்வி, வீடு மற்றும் காணிப் பிரச்சினைகள் குறித்தும், அவற்றை நிவர்த்தி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், அந்த அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதி இங்கு விசேட கவனம் செலுத்தினார்.

மேலும், மலையகப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு, தகுதியான தமிழ் மொழி மூல ஆசிரியர்களை விரைவாக ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாகவும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்களான பி. திகம்பரம், வி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் பலர் இச்சந்திந்திப்பில் கலந்துகொண்டனர்.

“அரச ஊழியர்களுக்கு ஏப்ரல் 16, 17 இல் இணையவழி வேலை”

அரச சேவையை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவின் மூன்றாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் இணையவழி ஊடாக நேற்று (01) நடைபெற்றது.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு மத்தியில், எரிபொருள் மற்றும் வலுசக்தியை முகாமைத்துவம் செய்து அரச சேவையைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்காகக் கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான முன்னேற்றம் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

அதேபோன்று, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்கள், அமைச்சு மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுவது மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, மார்ச் 31 ஆம் திகதி வரை 42% டீசலை சேமித்துள்ளதுடன், மின்சாரம் மற்றும் நீர் முகாமைத்துவத் திட்டங்கள் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதன்போது தெரியவந்தது.

ஏப்ரல் 07 மற்றும் 09 ஆகிய திகதிகளில் பாடசாலை மட்டத்தில் வலுசக்தி முகாமைத்துவம் குறித்த தெளிவூட்டல் திட்டங்களை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பல்கலைக்கழகங்கள் முடியுமான சந்தர்ப்பங்களில் இணையவழி ஊடாக இயங்கும் என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

கிராம உத்தியோகத்தர் நுழைவுப் பரீட்சைகள் உள்ளிட்ட பரீட்சைகள் திட்டமிட்டபடி நடத்தப்பட்டதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்ததுடன், போக்குவரத்து, டிஜிட்டல் பொருளாதாரம், நீதி அமைச்சு உள்ளிட்ட பல அமைச்சுகள் அத்தியாவசிய ஊழியர்களை வரவழைத்தும், இணையவழி ஊடாகவும் சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டது.

அரச நிறுவனங்களின் எரிபொருள் மற்றும் வலுசக்தி முகாமைத்துவத்தைக் கண்காணிப்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், இதற்காக அரச நிறுவனங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் சேமிக்கப்பட்டுள்ள வலுசக்தியின் அளவு குறித்து அடுத்த குழுக்கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், நீர் விரயமாவதைத் தவிர்த்தல் மற்றும் மாற்று நீர் மூலங்களைப் பயன்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அவசரத் திட்டமொன்றை, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மற்றும் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம் இணைந்து நடைமுறைப்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் இணையவழி ஊடாகக் கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பான வழிகாட்டல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், பொது நிர்வாக அமைச்சின் உடன்பாட்டுடன் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும், அதன்படி 2026 ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் அந்த வழிகாட்டல்களின்படி செயற்படுவதற்குத் தேவையான சுற்றுநிருபங்களை வெளியிடுவதற்கும், ஏப்ரல் 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் இணையவழி ஊடாகக் கடமைகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கும், சுயாதீன ஆணைக்குழுக்களும் இணையவழி முறையைப் பின்பற்றுவது குறித்து தெளிவுபடுத்துவதற்கும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

மேலும், நாளாந்த வலுசக்தி நுகர்வு, கையிருப்பு அளவு, அரச ஊழியர்களின் வருகை போன்றவற்றை Dashboard ஊடாகக் காட்சிப்படுத்தி, உரிய பணிகளைக் கண்காணிப்பதற்கும் தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

2026 ஏப்ரல் 08 ஆம் திகதி குழு மீண்டும் கூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ. எச். எம். எம். எச். அபேரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்திரி,ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க, வலுசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் டி. எம். உதயங்க ஹேமபால, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் அயேஷா ஜினசேன, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் டி. ஆர். டபிள்யூ. எஸ். தனபால, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி.கே. பெரேரா, வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் குமுது லால் போகஹவத்த,ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ஏ. எஸ். எஸ். ராஜகருணா உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

அரச சேவையை முறையாகப் பேணுவதற்காக நியமிக்கப்பட்ட குழு மூன்றாவது முறையாகக் கூடியது

அரச சேவையை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவின் மூன்றாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் இணையவழி ஊடாக நேற்று (01) நடைபெற்றது.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு மத்தியில், எரிபொருள் மற்றும் வலுசக்தியை முகாமைத்துவம் செய்து அரச சேவையைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்காகக் கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான முன்னேற்றம் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

அதேபோன்று, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்கள், அமைச்சு மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுவது மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, மார்ச் 31 ஆம் திகதி வரை 42% டீசலை சேமித்துள்ளதுடன், மின்சாரம் மற்றும் நீர் முகாமைத்துவத் திட்டங்கள் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதன்போது தெரியவந்தது.

ஏப்ரல் 07 மற்றும் 09 ஆகிய திகதிகளில் பாடசாலை மட்டத்தில் வலுசக்தி முகாமைத்துவம் குறித்த தெளிவூட்டல் திட்டங்களை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பல்கலைக்கழகங்கள் முடியுமான சந்தர்ப்பங்களில் இணையவழி ஊடாக இயங்கும் என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

கிராம உத்தியோகத்தர் நுழைவுப் பரீட்சைகள் உள்ளிட்ட பரீட்சைகள் திட்டமிட்டபடி நடத்தப்பட்டதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்ததுடன், போக்குவரத்து, டிஜிட்டல் பொருளாதாரம், நீதி அமைச்சு உள்ளிட்ட பல அமைச்சுகள் அத்தியாவசிய ஊழியர்களை வரவழைத்தும், இணையவழி ஊடாகவும் சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டது.

அரச நிறுவனங்களின் எரிபொருள் மற்றும் வலுசக்தி முகாமைத்துவத்தைக் கண்காணிப்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், இதற்காக அரச நிறுவனங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் சேமிக்கப்பட்டுள்ள வலுசக்தியின் அளவு குறித்து அடுத்த குழுக்கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், நீர் விரயமாவதைத் தவிர்த்தல் மற்றும் மாற்று நீர் மூலங்களைப் பயன்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அவசரத் திட்டமொன்றை, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மற்றும் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம் இணைந்து நடைமுறைப்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் இணையவழி ஊடாகக் கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பான வழிகாட்டல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், பொது நிர்வாக அமைச்சின் உடன்பாட்டுடன் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும், அதன்படி 2026 ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் அந்த வழிகாட்டல்களின்படி செயற்படுவதற்குத் தேவையான சுற்றுநிருபங்களை வெளியிடுவதற்கும், ஏப்ரல் 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் இணையவழி ஊடாகக் கடமைகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கும், சுயாதீன ஆணைக்குழுக்களும் இணையவழி முறையைப் பின்பற்றுவது குறித்து தெளிவுபடுத்துவதற்கும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

மேலும், நாளாந்த வலுசக்தி நுகர்வு, கையிருப்பு அளவு, அரச ஊழியர்களின் வருகை போன்றவற்றை Dashboard ஊடாகக் காட்சிப்படுத்தி, உரிய பணிகளைக் கண்காணிப்பதற்கும் தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

2026 ஏப்ரல் 08 ஆம் திகதி குழு மீண்டும் கூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

பதுளை மாவட்ட உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் பதுளை கல்வி வலயம் முதலாம் இடம்

பதுளை மாவட்ட உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் பதுளை கல்வி வலயம் முதலாம் இடம்

க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் பதுளை மாவட்டத்தின் பதுளை கல்வி வலயம் 67.97 சதவீத பெறுபேறுகளுடன் மாவட்டத்தில் முதலாம் இடம் பெற்றுள்ளதாக ஊவா மாகாண கல்வித் திணைக்களம் வெளியிட்டுள்ள பகுப்பாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வலயத்தில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் 1838 மாணவர்கள் பல்கலைகழகங்களில் உயர்கல்வியைத் தொடர தகுதி பெற்றுள்ளனர்.

பசறை கல்வி வலயம் 66.98 சதலீத பெறுபேறுகளுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதுடன் இவர்களில் 361 மாணவர்கள் பல்கலைகழகங்களில் உயர்கல்வியைத் தொடர்வதற்கு விண்ணப்பிக்கத் தகுதிப் பெற்றுள்ளனர்.

இவ்வலயத்தின் ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி மாணவன் சதுர்சன் உயிர் முறைமைகள் தொழில்நுட்ப பாடப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடம்பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

வெலிமடை கல்வி வலயம் 64.60 சதவீத பெறுபேறுகளுடன் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளதுடன் 1113மாணவர்கள் பல்கலைகழகங்களில் உயர்கல்வியைத் தொடர்வதற்கு விண்ணப்பிக்கத் தகுதிப் பெற்றுள்ளனர்.

பண்டாரவளை கல்வி வலயம் 64.40 சதவீத பெறுபேறுகளுடன் நான்காம் இடத்தினையும், மஹியாங்கனை கல்வி வலயம் 63.05 பெறுபேறுகளுடன் ஐந்தாம் இடத்தினையும் வியலுவ கல்வி வலயம் 55.87 சதவீத பெறுபேறுகளுடன் ஆறாம் இடத்தையும் பெற்றுள்ளது.

பதுளை மாவட்டத்தில் 10242 பாடசாலை பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களில் 6646 மாணவர்கள் பல்கலைகழகங்களில் உயர்கல்வி கற்பதற்காக விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.1005 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பசறை நிருபர்

கொத்மலை, கெரண்டியெல்லவில் கோர விபத்து: ஐவர் காயம்!

கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரம்பொடை, கெரண்டியெல்லவில்  பகுதியில் வேனொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் கொத் மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வெளிமடை பகுதிக்கு சென்று ரம்பொடையில் உள்ள தமது வீட்டுக்கு திரும்பும் வழியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே காயம் அடைந்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

கௌசல்யா.

இத்தாலி அணியின் உலகக்கிண்ண கனவு கலைவு!

 

பிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடர் வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை கனடா, அமெரிக்​கா, மெக்சிக்​கோ​வில் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில் இந்த தொடருக்​கான ஐரோப்​பிய தகுதி சுற்​றின் பிளே ஆ ப் ஆட்டங்​கள் நடை​பெற்​றன.

இதில் போஸ்​னி​யா​வில் உள்ள ஜெனிகா நகரில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் 4 முறை சாம்​பிய​னான இத்​தாலி, தரவரிசை​யில் 66-வது இடத்​தில் உள்ள போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா அணி​யுடன் பலப்​பரீட்சை நடத்தி​யது.

15-வது நிமிடத்​தில் இத்​தாலி அணி​யின் மொயீஸ் கீன் கோல் அடித்து அசத்​தி​னார். இதனால் அந்த அணி 1-0 என முன்​னிலை பெற்​றது. 41-வது நிமிடத்​தில் இத்தாலி வீரர் அலெஸாண்ட்ரோ பாஸ்​டோனிக்கு ரெட் கார்டு வழங்​கப்​பட்​டது.

இதனால் இத்​தாலி அணி 10 வீரர்​களு​டன் விளை​யாடும் நிலைக்கு தள்​ளப்​பட்​டது. 79-வது நிமிடத்​தில் போஸ்னியா பதிலடி கொடுத்​தது. அந்த அணி​யின் வீரர் ஹாரிஸ் தபகோ​விச் கோல் அடிக்க ஆட்​டம் 1-1 என சமநிலையை எட்​டியது.

நிர்​ண​யிக்​கப்​பட்ட 90 நிமிடங்​களின் முடி​வில் ஆட்​டம் 1-1 என சமநிலை​யில் இருந்​தது. இதையடுத்து கூடு​தலாக 30 நிமிடங்​கள் வழங்​கப்​பட்​டது. இதில் இரு அணி​கள் தரப்​பில் மேற்​கொண்டு கோல் அடிக்​கப்​பட​வில்​லை. இதனால் வெற்​றியை தீர்​மானிக்க பெனால்டி ஷுட் அவுட் முறை கடைபிடிக்​கப்​பட்​டது.

இதில் போஸ்​னியா மற்​றும் ஹெர்​சகோ​வினா அணி 4-1 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்று உலகக் கோப்பை கால்​பந்து தொடருக்கு தகுதி பெற்​றது. அந்த அணி உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெறு​வது இது 2-வது முறை​யாகும். கடைசி​யாக அந்த கடந்த 2014-ம் முதன்​முறை​யாக உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் விளையாடி இருந்​தது.

அதேவேளை​யில் இத்​தாலி அணி தொடர்ச்​சி​யாக 3-வது முறை​யாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற முடி​யாமல் வெளி​யேறி உள்​ளது. அந்த அணி 2018 மற்​றும் 2022-ம் ஆண்டு நடை​பெற்ற உலகக் கோப்பை தொடருக்​கும் தகுதி பெற இல்​லை.

1934, 1934, 1982 மற்​றும் 2006-ம் ஆண்​டு​களில் சாம்​பியன் பட்​டம் வென்ற இத்​தாலி அணி தற்​போதைய தோல்​வி​யால் கால்​பந்​தின் மிகப்​பெரிய திரு​விழா​வில் 16 ஆண்​டு​களாக நுழைய முடி​யாமல் தவிப்பு நிலைக்கு தள்​ளப்​பட்​டுள்​ளது.

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார்.

இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா கிரியேஷன்ஸ் மூலம் தில் ராஜு தயாரிக்​கிறார். இதுகுறித்த அதி​காரப்​பூர்வ அறி​விப்பை நடிகர் சல்​மான் கான் சமூக வலை​தளப் பக்​கத்​தில் தெரிவித்திருந்தார். இந்​நிலை​யில் இப்​படத்​தில் நயன்​தாரா நாயகியாக இணைந்​துள்​ளார். இதை படக்​குழு அறி​வித்​துள்ளது. ஷாருக்​கானின் ‘ஜவான்’ படம் மூலம் இந்​திக்​குச் சென்ற நயன்தாரா, இப்​போது சல்​மான் கான் படத்தி​லும் கதா​நாயகி​யாக நடிக்​கிறார்.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு வங்கித் துறை தோள் கொடுக்க வேண்டும்

0
தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...

இலங்கை வருகிறார் இந்திய துணை ஜனாதிபதி!

0
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்திய துணை ஜனாதிபதி சி....

புதன்கிழமை விடுமுறை இரத்து!

0
  "எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்துச் சிரமங்களைக் கருத்திற்கொண்டு அரச ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசேட புதன்கிழமை விடுமுறை, எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் இரத்துச் செய்யப்படுகின்றது" என்று அத்தியாவசிய...