Home Blog Page 3647

104 நாட்களுக்கு பின்னர் நாளை திறக்கப்படுகின்றன பாடசாலைகள்

கொரோனா வைரஸ் பரவலையடுத்து மூடப்பட்ட பாடசாலைகள் நாளை 29 ஆம் திகதி மீள திறக்கப்படவுள்ளன. அதன்பின்னர் நான்கு கட்டங்களின்கீழ் கல்வி நடவடிக்கை ஆரம்பமாகும்.

இதன்படி நாளை (29) அதிபர், ஆசிரியர்கள் உட்பட பாடசாலை நிர்வாகத்தினர் மாத்திரமே சமூகமளிக்க வேண்டும். மாணவர்கள் பாடசாலை செல்லவேண்டியதில்லை.

இரண்டாம் கட்டாக  ஜுலை 6 ஆம் திகதி  5,11 மற்றும் 13 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கை ஆரம்பமாகும்.

ஜுலை 20 ஆம் திகதி முதல் மூன்றாம் கட்ட நடவடிக்கை ஆரம்பமாகும். 10, 12 ஆம் ஆண்டுகளில் கல்வி பயிலும் மாணவர்கள் அன்று பாடசாலைக்கு வருகைதரமுடியும்.

ஜுலை 27 ஆம் திகதி நான்காம் கட்டமாக 3,4,6,7,8 மற்றும் 9 ஆம் ஆண்டு மாணவர்களை பாடசாலைக்கு அழைத்தவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கட்சி தாவியவர்களுக்கு இ.தொ.காவில் இடமில்லை – ரமேஷ் திட்டவட்டம்

இலங்கைத்  தொழிலாளர் காங்கிரசுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் ஏனைய தமிழக்கட்சிகளுக்குமிடையில் எவ்வித தொடர்பும் கிடையாது. காங்கிரஸ் ஐந்து வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தியுள்ளது. எனவே, போலி வேட்பாளர்களின் பிரச்சாரங்களை மக்கள் நம்பக்கூடாது.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொருளாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

கொத்மலையில் 28.06.2020 அன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

” இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுடன் தொடர்பிருக்கின்றது. எனவே, எதிர்காலத்தில் இணைவோம் எனக்கூறி சிலர் மக்களிடம் வாக்குகேட்கின்றனர். மேலும் சிலர் இரண்டு வாக்குகளை எங்களுக்கு தாருங்கள் என கெஞ்சுகின்றனர். நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் தொழிற்சங்கங்களுடன் காங்கிரசுக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. கட்சியைவிட்டு வெளியேறியவர்களை தற்போது இணைத்துக்கொள்ளும் எண்ணமும் இல்லை.

பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், நான் உட்பட ஐந்து வேட்பாளர்களே காங்கிரஸின் சார்பில் போட்டியிடுகின்றோம். ஐவரையும் மக்கள் வெற்றிபெறவைப்பதுடன், போலி பிரச்சாரம் முன்னெடுக்கும் வேட்பாளர்களுக்கும் சிறந்தபதிலை வழங்குவார்கள். எனவே, மக்கள் மத்தியில் அவர்களின் போலிப்பிரச்சாரம் எடுபடாது.

கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னர்தான் ஆயிரம் ரூபா கோரிக்கையை முன்வைத்தோம். ஐக்கிய தேசியக்கட்சியே அதனை தடுத்து நிறுத்தியது. இந்த அரசாங்கத்தின்கீழ் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. நாளை கையொப்பமிட்டால்கூட ஆயிரம் ரூபா கிடைத்துவிடும். ஆனால், நாம் அவசரப்படமாட்டோம்.

ஏனெனில் மேலதிகமாக இரண்டு கிலோ கொழுந்தையும், இறப்பரையும் கோருகின்றனர். அந்த கோரிக்கையை நாம் ஏற்கவில்லை. மக்களுக்கு எவ்வித சுமையும் அதிகரிக்காத வகையில் சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கம். அதற்காகவே நிதானமாக செயற்பட்டுவருகின்றோம். கூடியவிரைவில் ஆயிரம் ரூபா கிடைக்கும்.

காங்கிரஸின் பலம் நாளுக்குநாள் அதிகரித்துவருகின்றது. வெளி மாகாணங்களில் உள்ள இளைஞர்கள் இணைகின்றனர். ஆகஸ்ட் 5 ஆம் திகதிக்கு பின்னர் எமது பலம் அனைவருக்கும் தெரியவரும்.” – என்றார்.

க.கிசாந்தன்

மண்வெட்டியை மறைத்து சரணாகதி அரசியல் நடத்துபவர்களுக்கு பாடம் புகட்டுவோம்’

அபிவிருத்தி என்னும் பெயரில் எம் மக்களின் தனித்துவத்தை அழித்ததுடன் மண்வெட்டியை ஒளித்து வைத்து இன்னொரு கட்சியில் அடைக்கலம் புகுந்தவர்களுக்கு கோடரியின் மூலம் தக்க பாடம் புகட்டுவோம்.” – என்று அனுசா சந்திரசேகரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் கோடரி சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரும், மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகமும், சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன் இன்று வட்டவளை பகுதியில் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தீ விபத்து – சம்பவ இடத்துக்கு விரைந்து ஜீவன் முன்னெடுத்த அதிரடி நடவடிக்கை

மஸ்கெலியா, லெங்கா தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்பில் இன்றிரவு (27.06.2020) ஏற்பட்ட தீ விபத்தால் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.

ஒரு வீடு முழுமையாகவும், மற்றுமொரு வீடு பகுதியளவும் சேதமடைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மின் ஒழுக்கு காரணமாகவே தீப்பரவலம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார், அனர்த்தத்தின்போது வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்றிருந்ததாகவும் கூறினர்.

இது தொடர்பில் கேள்வியுற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தார்.

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்களை பாதுகாப்பான இடமொன்றில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ததுடன், அவர்களுக்கு 14 நாட்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்களை தனது சொந்த நிதியில் வழங்கியுள்ளார்.

அத்துடன், குறித்த லயன் குடியிருப்பு தொகுதியில் மின்ஒழுக்கு இருந்தால் விரைவில் அதனை சீர்செய்யுமாறு தோட்ட முகாமைத்துவ அதிகாரிகளிடம் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.

க.கிசாந்தன்

சினிமா

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...

செய்தி

செம்மணியில் இதுவரை 130 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

0
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று இடம்பெற்ற அகழ்வின் போது புதிதாக நான்கு மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் 29ஆம் நாள் அகழ்வுப் பணி...

கூரிய வாள்கள், ஐஸ் போதைப்பொருள்களுடன் வீட்டில் தங்கியிருந்த 19 பேர் மூதூர் பொலிஸாரால் கைது

0
சந்தேகத்துக்கிடமான முறையில் வீடொன்றில் தங்கியிருந்த 19 பேர் மூதூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து கூரிய வாள்கள், ஐஸ் போதைப்பொருள்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகத்துக்கிடமான முறையில் மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் பிரதேசத்தில்...

முன்னாள் எம்.பிக்களுக்கு அஸ்வெசும!

0
" முன்னாள் எம்.பிக்களுக்குரிய ஓய்வூதியக் கொடுப்பனவு நிச்சயம் இரத்து செய்யப்படும். எனவே. ஓய்வூதியத்தை இரத்து செய்த பின்னர் வாழ்வதற்கு சிரமமெனில் அஸ்வெசுமவுக்கு விண்ணப்பிக்கலாம். அதனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்." - அமைச்சர் வசந்த...