Home Blog Page 1646

புயலின் கோரத்தாண்டம் – 151 கால்நடைகள் உயிரிழப்பு!

‘மாண்டஸ்’ புயலின் தாக்கத்தால் வடக்கு மாகாணத்தில் மாத்திரம் நேற்று ஒரே நாளில் 254 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 151 கால்நடைகளும் உயிரிழந்துள்ளன என்று மாவட்ட செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்றுப் பகலும் இரவும் வீசிய புயல் காற்றாலேயே 254 வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன் பயன்தரு மரங்கள் பல முறிந்து வீழ்ந்து அழிவடைந்துள்ளன. அதேவேளை, கடும் குளிருடன் மழை பெய்ததால் 136 மாடுகளும், 15 ஆடுகளும் உயிரிழந்துள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்திலே அதிக வீடுகள் சேதமடைந்துள்ளன. அம்மாவட்டத்தில் 141 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்த அதேநேரம் 22 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிக கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இங்கு 129 கால்நடைகள் உயிரிழந்த அதேநேரம் 36 வீடுகள் சேதமடைந்துள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 31 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் மாவட்டத்தின் பெரும் வாழ்வாதாரமான வாழைச்செய்கை அதிகளவில் அழிவடைந்துள்ளது. வாழைத் தோட்டங்கள் நிறைந்த நீர்வேலி, கந்தன், நவக்கிரி மற்றும் கோப்பாய் ஆகிய பகுதிகளில் வாழை மரங்கள் குலையுடன் முறிந்து வீழ்ந்துள்ளன. இதனால் தங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்று வாழைத்தோட்ட உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அதேநேரம் வவுனியா மாவட்டத்தில் 34 வீடுகளும், மன்னார் மாவட்டத்தில் 12 வீடுகளும் சேதமடைந்துள்ளன.

பெண்களின் மார்பகம், பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு? ஈரான் ஹிஜாப் போராட்டம்

ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பெண்களின் முகம், மார்பகங்கள், பிறப்புறுப்பை குறிவைத்து பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானில் இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டத்திலிருந்து, அதாவது 1979 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டில் பொதுவெளியில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி அங்கு 9 வயது முதல் அனைத்து பெண்களும் பொது இடங்களில் ஹிஜாப் கட்டாயம் அணிய வேண்டும். அப்படி ஹிஜாப் அணியவில்லை என்றால் தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஹிஜாப் அணிவதைக் கண்காணிக்க ஈரான் அரசு தனியாக கலாச்சார காவலர்களையும் நியமித்தது.

அப்படித்தான் கடந்த செப்டம்பர் மாதம் குர்திஸ்தான் மாகாணத்தில் மாஷா அமினி என்ற 22 வயதுடைய இளம்பெண் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்றுக் கூறி அவரை காவலர்கள் கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் தலையில் காயமடைந்த அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மாஷா அமினியின் மரணம் ஈரான் நாடு முழுக்க கொந்தளிக்கச் செய்தது.

இதையடுத்து ஹிஜாப் சட்டங்களை நீக்கக் கோரி ஈரானில் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். கடந்த செப்.16ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஹாலிவுட் நட்சத்திரங்கள் தொடங்கிப் பல உலக பிரபலங்களும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் உலக அளவில் இது கவனத்தை ஈர்த்தது. ஹிஜாபுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்தி வருகின்றன. இருப்பினும் ஈரானின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பெண்களின் முகம், மார்பகங்கள் மற்றும் பிறப்புறுப்பை குறிவைத்து பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பதாக பிரிட்டிஷ் ஊடகமான ‘தி கார்டியன்’ செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவர் ஒருவர் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ள  ‘தி கார்டியன்’,  ”20 வயதான பெண் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கும்போது அப்பெண்ணின் பிறப்புறுப்பில் இருந்து  துப்பாக்கிக்குண்டின் இரு துகள்களை அகற்றினோம். தொடைப் பகுதியில் இருந்து 10 துகள்களை அகற்றினோம்” என்றார்.

5 அடிப்படை உரிமை மனுக்களை விசாரிக்க அனுமதி

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி  அலரி மாளிகையில்  ஒன்று கூடிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட சிலர், கோட்டாகோகம போராட்டக்களத்தில் அமைதியாக செயற்பட்டவர்கள் மீது தடியடி நடத்தி, கொடூரமாக தாக்கியமைக்கு  எதிராக தாக்கல் செய்யப்பட்ட 5 அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்வதற்கு  உயர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

தாக்குதலில் பலத்த காயமடைந்த லஹிரு ஷானக்க உள்ளிட்ட போராட்டக்காரர்கள்  இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

விஜித் மலல்கொட, ஜனக்க டி சில்வா உள்ளிட்ட நீதியரசர்கள் முன்னிலையில் மனு  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையை அடுத்த வருடம் ஜூன் மாதம் 22 ஆம் திகதி முன்னெடுப்பதற்கு நீதியரசர் குழாம் தீர்மானித்துள்ளது.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, மேல் மாகாணத்திற்கு  பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்டவர்கள் இந்த மனுவில் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் கருத்துகளை முன்வைக்குமாறு அறிவித்தல் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி புலஸ்தி ஹேவாமன்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவும் சட்டமா அதிபர் சார்பில் அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி சவீந்திர விக்கிரமவும் ஆஜராகினர்.

இரண்டு வரி சட்டமூலங்கள் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலம் மற்றும் உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டமூலம் என்பன இன்று (9) பாராளுமன்றத்தில் 30 மேலதிக வாக்குகளால்  நிறைவேற்றப்பட்டன.

மசோதாவுக்கு ஆதரவாக 82 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் கிடைத்தன.

அரசாங்கத்தில் இருந்து விலகி சுதந்திரமாக செயற்படும் சமகி ஜன பலவேகய கட்சியின் உறுப்பினர்கள் சட்டமூலங்களுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

இந்த மசோதாக்கள் மீதான விவாதம் நேற்று பகல் முழுவதும் நடைபெற்றது. விவாதத்தின் போது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட எம்பிக்கள் பேசினர்.

வளி மாசுபாடு அளவு வழமைக்கு திரும்பியுள்ளது

வளிமண்டலத்தில் வளி மாசு தரக்குறியீடு வழமைக்கு திரும்பியுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் இன்று  அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள சூறாவளியால் தூசு அடங்கிய காற்று இலங்கை நோக்கி வீசுவதால்  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளிலும் நேற்றிலும் பார்க்க குறைந்தளவில்  வளி மாசு நிலை இன்று நிவுவதாக பலரும் தெரிவித்தனர்.

நாட்டின் சில பகுதிகளில் வளி மாசு தரக்குறியீடு நேற்று 150 முதல் 200 புள்ளிகள் அளவில் அதிகரித்திருந்தது.

இதனிடையே, கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரம் படிப்படியாக வழமைக்கு திரும்புவதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

காற்றின் தரம் உடல் ஆரோக்கியத்திற்கு ஒவ்வாத நிலையை அடைந்துள்ளதால், சுவாசக்கோளாறு உடையவர்கள்  எதிர்வரும் நாட்களுக்கு மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

3 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

லங்கா சதொச மூன்று அத்தியாவசிய பொருட்களின் விலையை இன்று முதல் குறைத்துள்ளது.

எனவே, பொருட்களின் திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு:

கீரி சம்பா அரிசி 1 கிலோ:குறைக்கப்பட்டது – ரூ. 10

புதிய விலை – ரூ. 215

பெரிய வெங்காயம் 1 கிலோ:குறைக்கப்பட்டது – ரூ. 16

புதிய விலை – ரூ. 199

425 கிராம் டின்  மீன்:குறைக்கப்பட்டது – ரூ. 35

புதிய விலை – ரூ. 495

சஜித் மற்றும் ரஞ்சித்க்கு நீதிமன்றம் அழைப்பாணை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரை எதிர்வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் சமகி ஜன பலவேகய உறுப்புரிமையை எதிர்த்து ராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த மனுவையடுத்து, அவர்களது உறுப்புரிமை மற்றும் கட்சிக்குள் பதவிகள் அரசியல் சாசனத்திற்கு முரணானது என்று கூறி இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான பிரேமதாச மற்றும் பண்டார ஆகியோர் இன்னும் ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கம் வகிக்கின்றனர் என இராஜாங்க அமைச்சர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி உதித் இகலஹேவா தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் கமகே, ஐக்கிய தேசியக் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கையை சவாலுக்கு உட்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் நீதிமன்ற நடைமுறைகள் மற்றும் பல ஆவணங்களை நீதிமன்றில் சாட்சியமாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரினால் சத்தியக் கடதாசி தாக்கல் செய்தார்.

SJB அரசியலமைப்பின் பிரிவு 3, ஒரு உறுப்பினர் மற்றொரு கட்சிக்குள் ஒரு பதவியை வகிக்க முடியாது என்றும், அத்தகைய நடவடிக்கை SJB உறுப்பினர் தானாக நிறுத்தப்படுவதற்கு வழிவகுக்கும் என்றும் அவரது மனு கூறுகிறது.

இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரின் எஸ்.ஜே.பி.யில் பதவிகள் சட்டவிரோதமானது என அறிவிக்கவும், விசாரணை முடியும் வரை அந்த பதவிகளில் செயற்படுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் இராஜாங்க அமைச்சர் நீதிமன்றத்தை கோரியுள்ளார்.

மீண்டும் பால்மா விலை அதிகரிப்பு

400 கிராம் பால் மா பொதியின்  விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால் மா பொதி 1,240 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பால் மா பொதி இறக்குமதி 50% குறைந்துள்ளதாக வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகம் நவம்பர் மாதம் தெரிவித்திருந்தது.

டொலர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல காரணிகள் இந்த வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பால் மாவை இறக்குமதி செய்வதற்காக இறக்குமதியாளர்களுக்கு டொலர்களை இலகுவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

வார இறுதியில் மின்வெட்டு அமுலாகும் விதம்

வார இறுதி (10 & 11) மற்றும் திங்கட்கிழமை (12) இரண்டு மணிநேரம் 20 நிமிட மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW குழுக்கள் பகலில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும் மின் வெட்டு அமுலாகும்.

14ஆம் திகதி நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு தடை

தரம் 5 ஆம் புலமைப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் எதிர்வரும் 14ஆம் திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நடைபெறவிருக்கும் தரம் 5 ஆம் புலமைப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்களை ஏற்பாடு செய்தல் மற்றும் அதனை நடத்துதல், கருத்தரங்குகளை நடத்துதல் மற்றும் மாதிரி வினாப்பத்திரங்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தனி நபரோ அல்லது நிறுவனமோ தடை உத்தரவை மீறினால், மேற்கொண்டால் அவர் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக கருதப்படுவார் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சினிமா

நடிகர் ராஜேஷ் காலமானார்

0
தமிழ்த் திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார். அவருக்கு வயது 75. குறைந்த ரத்த அழுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பினால் அவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இயக்குநர் கே.பாலச்சந்தரின், ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் மூலம்...

யார் இந்த வேடன்? 

0
கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களிலும், செய்தி ஊடகங்களில் அதிகமாக அடிபட்ட பெயர் ‘வேடன்’. கேரளாவைச் சேர்ந்த மலையாள ராப் பாடகரான இவரது பாடல்கள்தான் சமீபநாட்களாக ரீல்ஸ், ஸ்டோரீஸ் உள்ளிட்டவற்றில் அதிகம் இடம்பெறுபவை. புரட்சிகரமான பாடல்...

நடிகையாக அறிமுகமாகிறார் வனிதாவின் மகள் ஜோவிகா!

0
  நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா, வனிதா ஃபிலிம் புரொடக் ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம், ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’. இதை வனிதா இயக்கி நாயகியாக நடித்துள்ளார். ராபர்ட், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி...

செய்தி

சீரற்ற காலநிலையில் 9,745 பேர் பாதிப்பு

0
கொழும்பு உட்பட நாட்டில் 14 மாவட்டங்களில் நிலவும் அடை மழை, கடும் காற்றுடனான சீரற்ற காலநிலையால் 2, 641 குடும்பங்களைச் சேர்ந்த 9,745 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 பேர் காயமடைந்துள்ளனர். மரம் முறிவு உள்ளிட்ட...

“எவ்வித பிரிவினையும் இன்றி அனைத்து மக்களுக்கும் சம உரிமை என்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்”

0
"எவ்வித பிரிவினையும் இன்றி அனைத்து மக்களுக்கும் சம உரிமை என்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்" “ இந்நாட்டை விட்டு வெளியேற நினைக்கும் மக்கள் மத்தியில் முதலில் நாடு தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். எமது...

உலக அழகிப் பட்டம் வென்றார் தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா

0
  ஹைதராபாத்தில் நடைபெற்ற உலகி அழகி இறுதிப் போட்டியில், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ 72-வது மிஸ் வேர்ல்டாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ரூ.8.5 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள...