Home Blog Page 266

மாகாணசபைத் தேர்தல்: எதிரணிகள் கூட்டு அரசியல் சமர்!

 

மாகாணசபைத் தேர்தலை விரைவில் பெறுவதற்குரிய எதிரணிகளின் கூட்டு அரசியல் சமர் உக்கிரமாக முன்னெடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

‘தேசிய இனப்பிரச்சினைக்கான ஓர் அரசியல் தீர்வாகவே மாகாணசபைத் தேர்தல் முறைமை கொண்டுவரப்பட்டது. உயிர் தியாகங்களுக்கு மத்தியிலேயே இம்முறைமை கொண்டுவரப்பட்டது. எனவே, மாகாண சபை முறைமை அவசியம்.

மாகாணசபைத் தேர்தல் பற்றி எதிரணிகள் கதைக்கின்றனவா என கேள்வி எழுப்படுகின்றது. இது பற்றி நாம் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகிறோம். மாகாணசபைகளின் கீழ் நிறைய பாடசாலைகள், வைத்தியசாலைகள் உள்ளன. அம்முறைமையில் ஜனாதிபதியின் ஏதேச்சாதிகாரம் இருப்பதை அனுமதிக்க முடியாது. ஆகவே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டு ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும்.

மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் வென்றெடுப்பதற்கு நாம் ஒன்றிணைய வேண்டும். இதற்காக ஜனநாயக வழியில் எல்லா வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.” – எனவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.

காசாவிலிருந்து படைகளை மீளப்பெற இஸ்ரேல் பச்சைக்கொடி!

 

காசாவில் இருந்து படைகளை மீளப்பெறுவதற்கு இஸ்ரேல் இணக்கம் தெரிவித்துள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் புகுந்து 2023-ம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி தாக்குதல் நடத்தி 1,200 பேர் கொல்லப்பட்டனர்.

250 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பாலஸ்தீனம் மீது போர் தாக்குதல் அறிவித்தார். போர் தொடங்கி 2-ம் ஆண்டை நெருங்கும்நிலையில் போரில் 66 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து போரை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்திருந்தார்.
வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்ப்பை சந்தித்து நெதன்யாகு கடந்த 30- ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்தினார்.

இரண்டு தலைவர்களுக்கு இடையே நடந்த இந்த பேச்சுவார்த்தையில் காசா போரை முடிவுக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டது.

இதற்காக டிரம்ப் சார்பில் அமைக்கப்பட்ட குழு 20 அம்ச அமைதி திட்டத்தை பரிந்துரைத்தது. காசாவை ஒரு பயங்கரவாதமற்ற, அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் இல்லாத பகுதியாக மாற்றுவதை முக்கிய அம்சமாக இந்த திட்டம் கொண்டுள்ளது.

இந்த திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உடனடியாக ஏற்றுக்கொண்டார். இந்த ஒப்பந்தந்தை ஏற்க ஹமாசுக்கு 72 மணிநேரம் கெடு விதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக டிரம்ப் கூறும்போது “இதுவே ஹமாசுக்கு இறுதி வாய்ப்பு. உடன்படாவிட்டால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்றார்.
இந்த சூழலில் இஸ்ரேல் கைதிகளை விடுவித்து அமைதி உடன்படிக்கைக்கு ஒத்துபோவதாக ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாசின் நிலைப்பாட்டை டிரம்ப் வரவேற்றுள்ளார்.

இந்தநிலையில் இஸ்ரேல்-காசா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்த இஸ்ரேல் தயாராக உள்ளதாக பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாலஸ்தீனத்தின் குறிப்பிட்ட பகுதியில் இருந்து முதல்கட்டமாக படைகளை விலக்கிக்கொள்ள இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்ரூத் சோசியல் வலைதளத்தில், “பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, காசாவில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் ராணுவம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது,

அதை நாங்கள் ஹமாசிடம் காட்டியுள்ளோம், பகிர்ந்து கொண்டுள்ளோம். ஹமாஸ் உறுதிப்படுத்தியதும், போர்நிறுத்தம் உடனடியாக அமுலுக்கு வரும், பணயக்கைதிகள் மற்றும் கைதிகள் பரிமாற்றம் தொடங்கும், அடுத்தகட்டமாக மற்ற பகுதிகளில் இருந்தும் படிப்படியாக இஸ்ரேல் படைகள் திரும்பப்பெறப்படும்” என்று அதில் பதிவிட்டுள்ளார்.

மரக்கறி விலைப்பட்டியல் (05.10.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (05) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

நுவரெலியா நகருக்குள் நடைபாதை வியாபாரத்துக்கு இடமளிக்கவே முடியாது!

 

நுவரெலியா நகரிற்கு உட்பட்ட பகுதிகளில் எக்காரணம் கொண்டும் நடைபாதை வியாபாரத்திற்கு சந்தரப்பம் வழங்க முடியாது. இது அரசாங்கத்தின் தேசிய கொள்கையை அமுல் படுத்துகின்ற செயல் திட்டம் என நுவரெலியா மாநகர சபையின் பிரதி முதல்வரும் சட்டத்தரணியுமான சிவன் ஜோதி யோகராஜா தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாநகர சபைக்கு உட்பட்ட நடைபாதை வியாபாரிகள் ஒரு சிலர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நுவரெலியா மாநகர சபையின் ஆணையாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முக்கிய காரணம் நடைபாதை வியாபாரிகளுக்கு நடைபாதையை பயன்படுத்தி வியாபாரம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

” இதனை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. நுவரெலியா நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடைபாதையை பயன்படுத்த முடியாமல் பொது மக்கள் பல அசௌகரியங்களை சந்தித்தனர். பாடசாலை மாணவிகள் நடைபாதையில் பயணிக்கின்ற பொழுது தமக்கு பல இடையூறுகள் விளைவிக்கப்படுவதாக முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.

பெற்றோர், பொது மக்களும் என்னுடைய காரியாலயத்திற்கு வருகை தந்து இது தொடர்பாக பல முறைப்பாடுகளையும் முன்வைத்துள்ளார்கள். எனவே நடைபாதை என்பது வியாபாரம் செய்வதற்கான ஒரு இடமல்ல. அது பொது மக்கள் பயன்படுத்துகின்ற ஒரு இடமாகும்.

மேலும் நுவரெலியா நகரம் என்பது சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை தருகின்ற ஒரு இடமாகும். எனவே இங்குள்ள நடைபாதைகள் வேறு தேவைகளுக்காக பயன்படுத்த முடியாது.

எனவே இந்த விடயத்தில் நாம் மிகவும் அவதானமாக இருக்கின்றோம். கடந்த காலங்களில் நுவரெலியா மாநகர சபை ஊடாக பல நடைபாதை வியாபாரிகளுக்கு வர்த்தக நிலையங்களை பெற்றுக் கொடுத்தாலும் இன்னும் இந்த பிரச்சினை தீர்ந்தபாடில்லை.

நாளுக்கு நாள் நடைபாதை வியாபாரிகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றார்கள். அவர்கள் வியாபாரத்தை நிறைவு செய்துவிட்டு போகின்ற நேரத்தில் வீதி ஓரங்களில் கழிவுகளையும் பொறுப்பற்ற விதத்தில் அகற்றிவிடுகின்றார்கள். எனவே இது நகரத்தை சுத்தமாக பேனுவதற்கு பல இடையூறுகளை ஏற்படுத்துகின்றது. எனவும் பிரதி முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

பணயக் கைதிகள் விடுவிப்பு: உலக நாடுகள் வரவேற்பு!

 

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் காசா அமைதி திட்டத்தை ஹமாஸ் அமைப்பு ஏற்றுள்ள நிலையில், அதனை உலக நாடுகள் வரவேற்றுள்ளன.

ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகள் ஹமாஸின் முடிவை அமைதிக்கான முக்கிய படியாக சுட்டிக்காட்டியுள்ளன.

பணயக் கைதிகளை விடுவிப்பதும், போர் நிறுத்தம் செய்வதும் இப்போது சாத்தியம் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்தார்.

ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை கீழே போட வேண்டும். இரு தரப்புகளும் சர்வதேச சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி குறிப்பிட்டார்.

இது ஒரு முக்கியமான முன்னேற்றப் படி என்று இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறினார்.
மத்தியஸ்தம் செய்யும் கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்காவுடன் மேலும் பேச்சு தொடரும் என்று அவர் கூறினார்.

ஹமாஸின் அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையும் வரவேற்றது. இந்த துயரமான மோதலை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து தரப்பினருக்கும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அழைப்பு விடுத்தார்.

போர் நிறுத்த திட்டத்துக்கு ஹமாஸ் இணக்கம்: தாக்குதலை உடன் நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு உத்தரவு!

 

போர் நிறுத்தம் தொடர்பான அமைதி திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ளவதாக அறிவித்த உடன், காசாவில் குண்டுவீசி தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என இஸ்ரேலுக்கு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் கடுமையாக தாக்கி வருகிறது. இந்த போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

இந்நிலையில் அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஜனாதிபதி டிரம்ப்பை சந்தித்து பேசியிருந்தார். அப்போது காசாவில் போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தை ஏற்க அவர் சம்மதம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அந்த ஒப்பந்தம் ஹமாஸ் அமைப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது, ஹமாஸ் அமைப்பு டிரம்ப் திட்டத்தினை ஏற்று, இஸ்ரேல் பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவிக்க சம்மதித்துள்ளன.

தற்போது இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்த முயற்சி இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்நிலையில் காசாவில் குண்டுவீசி தாக்குதல் நடத்துவதை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு டிரம்ப் உத்தரவிட்டார்.

இது குறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் அவர்கள் அமைதிக்கு தயாராக இருப்பதாக நான் நம்புகிறேன். காசா மீதான குண்டுவீச்சை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும்.

அப்போது தான் பிணைக் கைதிகள் அனைவரையும் பாதுகாப்பாகவும், விரைவாக மீட்க முடியும்.

தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் குறித்து நாங்கள் ஏற்கனவே விவாதித்து வருகிறோம். இது காசா பிரச்னை மட்டும் கிடையாது. மத்திய கிழக்கில் நீண்ட காலமாக நிலவி வரும் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டியது.” – எனவும் டர்ம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வருடத்துக்குள் மாகாணசபைத் தேர்தல்: கோரிக்கை முன்வைப்பு!

 

மாகாணசபைகளுக்குரிய தேர்தலை இவ்வருடத்துக்குள் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய.

கொழும்பில் நடந்த கருத்தரங்கொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

” நாட்டில் கடந்த 11 வருடங்களாக மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. எனினும், உள்ளாட்சிசபைத் தேர்தல் முடிந்த பின்னர், மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்திவருகின்றன.

ஆளுநர்களின்கீழ்தான் மாகாணசபை செயற்படுகின்றது. ஆனால் அந்த அதிகாரம் மக்கள் பிரதிநிதிகள் வசம் இருக்க வேண்டும். குறிப்பாக நிர்வாகம் ஆளுநர் வசம் இருப்பது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

மாகாணசபைத் தேர்தல் பற்றி தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதற்குரிய நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, சிறியதொரு அரசமைப்பு மறுசீரமைப்பு ஊடாக அத்தேர்தலை நடத்த முடியும். இவ்வருடத்துக்குள் அதனை நடத்துமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.” – எனவும் கரு ஜயசூரிய மேலும் குறிப்பிட்டார்.

திலீபனின் தியாகத்தில் அரசியல் செய்யாதீர்! அரசியல் கலப்பற்ற நினைவேந்தல் கட்டமைப்பு அவசியம்!!

 

தியாக தீபம் திலீபனின் தியாகத்தில் அரசியல் செய்ய வேண்டாம் எனக் கட்சிகளிடமும் அமைப்புக்களிடமும் கோரிக்கை முன்வைத்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொருத்தமான அரசியல் கலப்பற்ற நினைவேந்தல் கட்டமைப்பை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே சி.வி.கே.சிவஞானம் இதனைத் தெரிவித்தார்.
‘ அண்மைக்காலமாக தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தொடர்பில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் தியாக தீபம் திலீபனுக்கு உதவியாகவும் அவருக்குப் பின்னர் யாழ்ப்பாணம் மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த ராஜன் உள்ளிட்ட மூத்த போராளிகள் பலரும் என்னைத் தொடர்பு கொண்டு இது தொடர்பில் அரசியல் கலப்பற்ற ஒரு கட்டமைப்பை உருவாக்குமாறு கேட்டுகொண்டனர்.

1988 ஆம் ஆண்டு என்னுடைய செலவிலேயே தியாக தீபம் திலீபனுக்கான தூபி “தியாக தீப தூபி” என்ற பெயரில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. அந்தத் தூபி 7 வருடங்களுக்கு பின்னர் 1995ஆம் ஆண்டு உடைக்கப்பட்டது.

அதன் காரணமாக நான் சுடப்பட்டு, வேலை இழந்து இந்திய அமைதிப்படை பாதுகாப்பு, கைது எனத் தடுக்கப்பட்டு இந்தியாவுக்குத் தப்பியோட வேண்டிய நிலை ஏற்பட்டது.” எனவும் சிவஞானம் சுட்டிக்காட்டினார்.

தற்போது தீபங்களுக்கு முன்பாக தலைகுனிந்து நிற்பவர்கள் தம்மைத் தியாகிகளாக நினைக்கின்றனர். இதில் யார், யார் இராணுவப் புலனாய்வுடன் தொடர்பு கொண்டவர்கள் என்பது எனக்குத் தெரியும்.

திலீபனுடன் தொடர்பைக் கொண்டவன், தூபியைத் திரும்ப நிறுவியவன் என்ற அடிப்படையில் எனக்கு அதைப் பற்றி தெரியும்.
2002 ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கையின் போது தூபி உடைக்கப்பட்டு 2003.08.25 ஆம் திகதி மீளத் திறந்து வைக்கப்பட்டதுடன் அந்தத் தூபி யுத்தம் முடிந்த பிறகு 25.03.2010 அன்று உடைக்கப்பட்டது.

தற்போது அந்த உடைக்கப்பட்ட தூபியின் பூர்வீகத் அடித்தளத்துக்கே அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
வடக்கு மாகாண சபை இருந்த காலத்தில் நான் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்குத் தூபி தொடர்பில் கடிதம் எழுதினேன். அது பின்னர் சாத்தியப்படவில்லை.

யுத்தம் முடிந்த பிறகு முதன்முறையாக 2016ஆம் ஆண்டு தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தைத் துப்பரவாக்கி நினைவேந்தலைச் செய்யுமாறு ஜனநாயகப் போராளிகள் கட்சியை நான் வலியுறுத்தினேன். அதன்படி அது நடந்தது. 2017ஆம் ஆண்டில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ{ம் இணைந்து கொண்டனர்.

2018 இல் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் நினைவிடத்தில் கொட்டில் போட்டு ஆதிக்கம் செலுத்தியபோது மாவை சேனாதிராஜாவை அழைத்துக்கொண்டு நான் சென்றபோது நாங்கள் ஏளனமாக நடத்தப்பட்டடோம்.

தற்போது உள்ளவர்கள் வரலாற்றை திரிபுபடுத்தக்கூடாது. திலீபன் எல்லோருக்கும் பொதுவானவன். அவன் கௌரவிக்கப்பட வேண்டியவன். மதிப்பளிக்கப்பட வேண்டியவன். போட்டி, பொறாமையால் நினைவேந்தலைக் கொச்சைப்படுத்த கூடாது. ” – எனவும் தமிழரசுக் கட்சியின் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை தற்போது நீக்காதீர்!

” நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தற்போது நீக்கப்படக்கூடாது.” – என்று முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

” நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை தற்போது நீக்க வேண்டாம் என அரசிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். ஏனெனில் இந்நாட்டில் ஜனாதிபதியொருவர் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையேல் நாட்டின் இருப்பு ஆட்டம் காணக்கூடும்.

எனினும், ஏதேனும் ஒரு நாளில் இரண்டுக்கு மேற்பட்ட வலுவான கட்சிகள் இந்நாட்டில் உதயமானால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் பற்றி பரிசீலித்து பார்க்கலாம்.” – எனவும் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டார்.

மரக்கறி விலைப்பட்டியல் (04.10.2025)

மரக்கறி விலைப்பட்டியல் (04.10.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (04) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

இறைவரித் திணைக்களத்தின் திறனை மேம்படுத்துவது குறித்து ஆராய்வு!

0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வரி வருவாயை விரிவுபடுத்துதல், வரி இணக்கத்தை அதிகப்படுத்துதல் மற்றும் நிலுவையில் உள்ள...

களுத்துறை மண்ணில் கல்வி கௌரவ விழா!

0
களுத்துறை மண்ணில் கல்வி கௌரவ விழா! கல்வி அமைச்சின் பெருந்தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சின்னையா ஜெயக்குமாருக்கான வரவேற்பு நிகழ்வும், களுத்துறை மாவட்டத்தின் தமிழ் பெருந்தோட்ட பாடசாலைகளின் அதிபர்களையும், ஓய்வுநிலை அதிபர்களையும்...

கலமுதுனை தமிழ் வித்தியாலயத்தில் உதயமாகிறது பழைய மாணவர் சங்கம்!

0
நூற்றாண்டு நோக்கிய பயணம்: கலமுதுனை தமிழ் வித்தியாலயத்தில் உதயமாகிறது பழைய மாணவர் சங்கம்! தொலஸ்பாகை, கலமுதுனை தமிழ் வித்தியாலய பழைய மாணவர் சங்க அங்குரார்ப்பன நிகழ்வு எதிர்வரும் மே 2 ஆம் திகதி பாடசாலை...