Home Blog Page 268

மனிதப் புதைகுழி அகழ்வுக்கு போதுமான நிதி வழங்கப்படும்

வடக்கு, கிழக்கு பகுதிகளில் மனிதப் புதைகுழிகள் எனச் சந்தேகிக்கப்படும் இடங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்குப் போதுமான நிதி, தமது அமைச்சிடம் இருக்கின்றது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

மனிதப் புதைகுழிகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அதன்படி, மட்டக்களப்பு, குருக்கள்மடம் மனிதப் புதைகுழிக்கான நிதி முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறினார்.

அத்துடன், யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் அலுவலக மட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

உரிய நடைமுறைகளை விரைவில் பூரணப்படுத்தி, தேவையான நிதியை வழங்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய, மனிதப் புதைகுழி அகழ்வுக்கான நிதி விடயத்தில் எவ்வித சிக்கல்களும் இல்லை என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டினார்.

மரக்கறி விலைப்பட்டியல் (03.10.2025)

மரக்கறி விலைப்பட்டியல் (03.10.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

பிரிட்டனில் யூத தேவாலய வளாகத்தில் பயங்கரவாதத் தாக்குதல்: இருவர் பலி!

 

பிரிட்டன் யூத தேவாலயத்துக்கு அருகில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.

பிரிட்டன், வட மான்செஸ்டர், க்ரம்சால் பகுதியில் ஹீட்டன் பார்க் ஹீப்ரு காங்கிரஸ் என்ற யூத தேவாலயம் அமைந்துள்ளது.

இந்நிலையில் நேற்று யூதர்களின் புனித நாளான யோம் கிப்பூர் கொண்டாட்டதிற்காக அங்கு ஏராளமானோர் குழுமி இருந்தனர்.

உள்ளுர் நேரப்படி காலை 9.30 மணியளவில் அப்பகுதி வழியே நபர் ஒருவர் காரை ஓட்டி வந்து ஆலயம் அருகே சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் மீது மோதியுள்ளார்.

மேலும் காரில் இருந்து இறங்கி அங்கிருந்த ஒருவரை கத்தியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர், 3 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் குற்றவாளியை துரத்திச் சென்று சுட்டுக் கொன்றனர். அவரிடமிருந்து வெடிகுண்டு போன்ற சந்தேகத்திற்குரிய பொருட்கள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் வெடிகுண்டு அங்கியை அணித்திருந்ததாக தெரிகிறது.

வெடிகுண்டு அகற்றும் குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன. சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரி,

‘திரும்பிப் போங்கள், அவர் ஒரு வெடிகுண்டை வைத்திருக்கிறார், விலகிச் செல்லுங்கள்ஷ” என்று பொதுமக்களை நோக்கி சத்தமிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
மேலும் குற்றவாளியை பொலிஸார் சுட்டுக்கொள்ளும் வீடியோவும் வைரலாகி வருகிறது.

ஐரோப்பிய அரசியல் சமூக மாநாட்டில் பங்கேற்பதற்காக டென்மார்க் சென்றிருந்த பிரிட்டன் பிரதமர் தனது பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார். இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதலாக பிரிட்டன் காவல்துறை அறிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் நிச்சயம் நீக்கப்படும்

 

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இம்மாத இறுதிக்குள் அந்நடவடிக்கை இறுதிபெறும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் எனவும், செப்டம்பர் மாத இறுதிக்குள் சட்டமூலம் இறுதிபெறும் எனவும் முன்னதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் வினவியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

” மேற்படி நடவடிக்கைக்குரிய சட்டமூல தயாரிப்பு பணி இடம்பெறுகின்றது. இம்மாதத்துக்குள் அது இறுதிபெறும். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்ற உறுதிமொழி எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்டுள்ளது. அது நிச்சயம் நிறைவேற்றப்படும்.” – என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

மகாத்மா காந்தியின் ஜனன தினம் யாழில் அனுஷ்டிப்பு!

மகாத்மா காந்தியின் 156 வது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வில் இந்திய துணைத்தூதர் சாய் முரளி , வடமாகாண பிரதம செயலாளர் மு.தனுஜா, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், யாழ் மாநகர பிரதி முதல்வர் இ.தயாளன்,யாழ் மாநகர ஆணையாளர் கிருஷ்ணேந்திரன் மற்றும் சமய சமூக பிரதிநிதிகள், இந்திய துணைத்தூதரக அதிகாரிகள், அகில இலங்கை காந்தி சேவா சங்க பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது காந்தீயம் ஏடு வெளியிட்டு வைக்கப்பட்டு அதன் பிரதி அனைவருக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை இந்திய துணைத் தூதரக அதிகாரிகளால் துவிச்சக்கர வண்டி பவனியொன்றும் மேற்கொள்ளப்பட்டது.

நிவாரணப் படகுகளை நடுக்கடலில் இடைமறித்த இஸ்ரேல்!

காசாவுக்கு நிவாரண உதவிப் பொருட்களுடன் ஐரோப்பாவில் இருந்து வந்த படகுகளை நடுக்கடலில் இஸ்ரேல் இடைமறிந்துள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலர் இந்தப் படகு பயணத்தில் இருந்தனர். ஆறு ஆஸ்திரேலியர்களும் சென்றுள்ளனர்.

பாலஸ்தீனத்தின் காசா பகுதி வாழ் மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவி பொருட்களுடன் பார்சிலோனாவில் இருந்து 50 படகுகளில் சுமார் 500 செயற்பாட்டர்கள் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் பயணம் மேற்கொண்டனர்.

இந்தப் படகுகளில் சில புதன்கிழமை இரவு பாலஸ்தீன பிரதேசத்தை அடைந்தன.

அப்போது அதனை இஸ்ரேல் கடற்படையினர் இடைமறித்துள்ளனர். இதில் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் பயணித்த படகும் அடங்கும்.

இந்தப் படகு பயணத்தில் உள்ள சிரியஸ், அல்மா, அடாரா படகுகள் காசா கடற்கரையை நெருங்க சுமார் 80 மைல்கள் தொலைவு இருந்த நிலையில் இஸ்ரேல் கடற்படையினர் படகுகளை இடைமறித்துள்ளனர்.

அதை படகுகளில் பயணித்தவர்கள் சமூக வலைதள பதிவுகளில் பகிர்ந்து உறுதி செய்துள்ளனர். அப்போது ‘பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும்’ என அவர்கள் முழங்கினர். ஏற்கெனவே இதே போல கடந்த ஜூன் மாதம் நிவாரண பொருட்களுடன் காசா நோக்கி வந்த படகுகளுக்கு இஸ்ரேல் அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது.

“சுமார் 12-க்கும் மேற்பட்ட படகுகளில் வந்த இஸ்ரேல் கடற்படையினர், பாலஸ்தீன கடல் பரப்பை நெருங்கிய எங்கள் படகுகளை இடைமறித்தனர். நாங்கள் பயணித்த படகுகளின் இயக்கத்தை நிறுத்துமாறு அவர்கள் தெரிவித்தனர். அடுத்தகட்ட உத்தரவு வரும் வரை எங்களை காத்திருக்குமாறு கூறியுள்ளனர்.

இல்லையெனில் எங்களது படகுகள் கைப்பற்றபடும் என கூறியுள்ளனர். மேலும், அதற்கான விளைவுகளை நாங்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என தெரிவித்துள்ளனர்” என்று காசாவுக்கு உதவு பொருட்களுடன் படகில் சென்ற அமெரிக்கர் கிரேக் ஸ்டாகர் தெரிவித்துள்ளார். இதை இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கிரெட்டா தன்பெர்க் மற்றும் அவரது நண்பர்கள் பாதுகாப்பாக இருப்பதாக கூறியுள்ளார்.

அந்தப் பதிவில் படகின் மேல்புறத்தில் கிரெட்டா தன்பெர்க் அமர்ந்துள்ளார். இந்த பயணத்தில் நெல்சன் மண்டேலாவின் பேரனும் பயணித்துள்ளார். அவர்களுடன் ஐரோப்பியாவை சேர்ந்த செயற்பாட்டாளர்களும் உள்ளனர்.

இஸ்ரேலின் நடவடிக்கை சில மணி நேரம் வரை தொடரும் என எதிர்பார்க்கிறோம். அவர்களது படகுகள் அனைத்தும் இஸ்ரேலின் அஸ்தோது நகரில் உள்ள துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்படலாம். பின்னர் அங்கிருந்து அவர்கள் நாடு கடத்தப்படலாம் என இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

இஸ்ரேலின் இந்த செயலுக்கு துருக்கி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. சர்வதேச சட்டத்துக்கு எதிராக இஸ்ரேல் செயல்படுகிறது. நிவாரண உதவி பொருட்களுடன் படகுகளில் காசா சென்ற துருக்கி நாட்டினர் மற்றும் அவர்களுடன் உள்ளவர்களை உடனடியாக இஸ்ரேல் விடுவிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை நாங்கள் முன்னெடுத்துள்ளோம் என துருக்கியின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் அரசுகள் படகுகளில் பயணித்தவர்களின் நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையக மாணவர்களால் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிவைப்பு!

 

மலையக பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சிறுவன் தினமான நேற்று மின்னஞ்சல் மூலம் குறித்த கடிதம் அனுப்பட்டுள்ளது.

இதற்குரிய நிகழ்வு தெல்தோட்டை, லூல்கந்தூர பகுதியில் இலங்கையில் முதன்முதலில் தேயிலையை பயிரிட்ட ஜேம்ஸ் டெய்லரின் சிலைக்கு முன்னால் நடைபெற்றது.

மனிதவள அபிவிருத்தி ஸ்தாபன நிறுவனத்தின் பணிப்பாளர் பி.லோகேஸ்வரி மற்றும் லூல்கந்தூர ஆதவன் தமிழ் வித்தியாலய பாடசாலை அதிபர் எம்.மகேந்திரன் இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கினர்.

லூல்கந்தூர பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் மேற்படி கடிதத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

க.யோகா

மரக்கறி விலைப்பட்டியல் (02.10.2025)

மரக்கறி விலைப்பட்டியல் (02.10.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (02) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

பெருந்தோட்டத் தொழிலாளர்களை பழிவாங்குகிறது அரசு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1750 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்ட போது, அது போதாது என்றும் 2000 ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றும் அன்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தொழிற்சங்கம் கூறியது. ஆனால் இன்று பெருந்தோட்ட மக்கள் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதால் 1750 ரூபாவைக் கூட பெற்றுக் கொடுக்காமல் அரசாங்கம் அவர்களை பழி வாங்குவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்களுடன் நேற்று செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பெருந்தோட்ட மக்கள் சகல தேர்தல்களிலும் எமக்கு ஆதரவளித்திருக்கின்றனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மலையக தமிழ் மக்களும், வடக்கு, கிழக்கு தமிழ் மக்களும் சஜித் பிரேமதாசவுக்கே வாக்களித்திருந்தனர். கடந்த காலங்களில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1750 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் என நாம் வலியுறுத்திய போது, ஜே.வி.பி. தொழிற்சங்கம் 2000 ரூபா வழங்கப்பட வேண்டும் என்று வாதிட்டது.

ஆனால் தற்போது ஜே.வி.பி. ஆட்சியமைத்துள்ள நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1750 ரூபா சம்பளமும் இல்லை, தொழிலும் இல்லை என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சஜித் பிரேதாசவுக்கு வாக்களித்தமையால் அரசாங்கம் அவர்களை பழி வாங்குவதற்காகவே இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கிறதுர்.

இலங்கையில் அமெரிக்க முதலீடுகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் மீது நம்பிக்கையின்மையே இதற்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளை சிறையிலடைத்து அதில் திருப்தியடைவது மாத்திரமே அரசாங்கத்தின் இலக்காகவுள்ளது. எதிர்க்கட்சிகள் மீதான அரசியல் பழிவாங்கல்களுக்கு அப்பால் கடந்த ஓராண்;டு காலமாக எந்தவொரு அபிவிருத்தியும் நாட்டில் இடம்பெறவில்லை.

பெருந்தோட்டத் துறை உள்ளிட்ட எந்தவொரு விவசாயத்திலும் உற்பத்திகள் அதிகரிக்கப்படவில்லை. இதனால் பயிர் செய்கையாளர்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அரசாங்கத்தால் அவர்களுக்கு எந்தவொரு நிவாரணமும் வழங்கப்படவில்லை. முற்றுமுழுதாக தமது வாக்குகளை ஜே.வி.பி.க்கு வழங்கிய அரச உத்தியோகத்தர்களும் இன்று கைவிடப்பட்டு வீதிக்கிறங்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஊழல் ஒழிப்பு எனக் கூறும் அரசாங்கம் இதுவரையில் கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரதூரமான மோடிகள் தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக சில்லறை கொள்ளைகளில் ஈடுபட்டோர் மாத்திரமே கைது செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஐ.தே.க. சம்மேளனத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் பங்குபற்றியதை அவதானித்த அரசாங்கம், அதை கள்வர்களின் கூடாரம் என விமர்சித்தது.

ஆனால் தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்குள்ளும் கள்வர்கள் இருக்கின்றனர் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உண்ண உணவு இல்லை, உடுத்த ஆடையில்லை என பஞ்சம் பாடியவர்கள் இன்று பல கோடி சொத்துக்களுக்கு உரிமையாளர்களாகவுள்ளமை எவ்வாறு? இதுதான் ஜே.வி.பி.யின் கொள்கையா? 2020இல் ஆட்சியமைத்தவர்கள் இரண்டு ஆண்டுகளிலேயே ஆட்சியைக் கைவிட்டுச் செல்லும் நிலைமை ஏற்பட்டது. அதேபோன்று வெகுவிரைவில் இவர்களும் ஆட்சியை கைவிட்டுச் செல்ல வேண்டியேற்படுமா என்ற சந்தேகம் தற்போது வலுப்பெற்றுள்ளது என்றார்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

இறைவரித் திணைக்களத்தின் திறனை மேம்படுத்துவது குறித்து ஆராய்வு!

0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வரி வருவாயை விரிவுபடுத்துதல், வரி இணக்கத்தை அதிகப்படுத்துதல் மற்றும் நிலுவையில் உள்ள...

களுத்துறை மண்ணில் கல்வி கௌரவ விழா!

0
களுத்துறை மண்ணில் கல்வி கௌரவ விழா! கல்வி அமைச்சின் பெருந்தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சின்னையா ஜெயக்குமாருக்கான வரவேற்பு நிகழ்வும், களுத்துறை மாவட்டத்தின் தமிழ் பெருந்தோட்ட பாடசாலைகளின் அதிபர்களையும், ஓய்வுநிலை அதிபர்களையும்...

கலமுதுனை தமிழ் வித்தியாலயத்தில் உதயமாகிறது பழைய மாணவர் சங்கம்!

0
நூற்றாண்டு நோக்கிய பயணம்: கலமுதுனை தமிழ் வித்தியாலயத்தில் உதயமாகிறது பழைய மாணவர் சங்கம்! தொலஸ்பாகை, கலமுதுனை தமிழ் வித்தியாலய பழைய மாணவர் சங்க அங்குரார்ப்பன நிகழ்வு எதிர்வரும் மே 2 ஆம் திகதி பாடசாலை...