Home Blog Page 272

காஷ்மீரில் மூடப்பட்ட 12 சுற்றுலா தலங்கள் திறப்பு!

 

காஷ்மீரின் பஹல்​காமின் பைசரன் பள்​ளத்​தாக்​கில் கடந்த ஏப்​ரல் 22-ம் திகதி பாகிஸ்​தான் ஆதரவு தீவிர​வா​தி​கள் நடத்​திய கொடூர தாக்​குதலில் 26 பேர் உயி​ரிழந்​தனர். இதையடுத்து பாது​காப்பு காரணங்​களுக்​காக 50 சுற்​றுலா தலங்​களை ஜம்மு காஷ்மீர் நிர்​வாகம் மூடியது.

இந்​நிலை​யில் விரி​வான பாது​காப்பு மறுஆய்​வுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் 12 சுற்​றுலாத் தலங்​கள் நேற்று மீண்​டும் திறக்​கப்​பட்​டன.

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலை​மை​யில் ஸ்ரீநகரில் கடந்த வெள்​ளிக்​கிழமை நடை​பெற்ற கூட்​டத்​தில் இதற்​கான முடிவு எடுக்​கப்​பட்​டது.

இதுகுறித்து எக்ஸ் தளத்​தில் மனோஜ் சின்ஹா வெளி​யிட்ட பதி​வில், “முழு​மை​யான பாது​காப்பு மறுஆய்வு மற்​றும் கலந்​துரை​யாடலுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் கூடு​தல் சுற்​றுலா தலங்​களை மீண்​டும் திறக்க உத்​தர​விட்​டுள்​ளேன்.

காஷ்மீர் பிராந்​தி​யத்​தில் அருபள்​ளத்​தாக்​கு, ராஃப்​டிங் முனையன்​னர், அக்​காட் பூங்​கா, பத்​ஷாஹி பூங்​கா, கமான் போஸ்ட் உள்ளிட்ட ஏழு சுற்​றுலா தலங்​களும், ஜம்மு பிராந்​தி​யத்​தில் ராம்​பனில் உள்ள டாகன் டாப், கது​வா​வில் உள்ள தாகர், சலாலில் உள்ள சிவ குகை உள்​ளிட்ட 5 சுற்​றுலா தலங்​களும் மீண்​டும் திறக்​கப்​படும்” என்று கூறி​யிருந்​தார்.

கடந்த ஜூன் மாதம் காஷ்மீரில் 8 சுற்​றுலா தலங்​களை திறக்க சின்ஹா உத்​தர​விட்​டார் என்பது குறிப்பிடத்தக்கது.

டயஸ்போராக்களின் நிகழ்ச்சி நிரலையே அரசு செயல்படுத்துகிறது: மஹிந்த அணி குற்றச்சாட்டு

டயஸ்போராக்களின் நிகழ்ச்சி நிரலையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயல்படுத்தி வருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” தேசிய மக்கள் சக்தியை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு டயஸ்போராக்கள் மற்றும் வெளிநாட்டு சக்திகள் உதவி வழங்கின. இது இரகசியமான விடயம் அல்ல.

இலங்கையின் கலாசாரத்தை சீரழிப்பது இத்தரப்புகளின் பிரதான நோக்கமாகும். ஏனெனில் கலாசாரம் சீரழிந்த நாடொன்றை அழிப்பதென்பது மிக எளிது.

எனவே, வெளிநாட்டு சக்திகள் மற்றும் டயஸ்போராக்களின் நிகழ்ச்சி நிரலுக்கமைய இந்த அரசாங்கம் செயற்படுகின்றதா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது.” – எனவும் சாகர காரியவசம் மேலும் குறிப்பிட்டார்.

ஜப்பானின் முன்னணி வர்த்தகர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

 

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் அங்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (29) ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் (JETRO) தலைமையகத்தில் ஜப்பானின் முன்னணி வர்த்தகர்களுடன் வட்டமேசை கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் (JETRO) தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி இஷிகுரோ நொரிஹிகோவின் (ISHIGURO Norihiko) பங்கேற்புடன் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் ஜப்பான் இலங்கை வர்த்தக ஒத்துழைப்புக் குழுவின் (JSLBCC) தலைவர் மற்றும் ITOCHU இன் தலைவர் புமிஹிகோ கொபயாஷி (Fumihiko Kabayashi) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இலங்கையில் காணப்படும் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாட்டில் முதலீட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்கி மோசடி மற்றும் ஊழலை ஒழிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.

இலங்கையின் முக்கிய பொருளாதார பங்காளியாக இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் அவசியத்தையும், அதன் ஊடாகப் பெறக்கூடிய பரஸ்பர நன்மைகள் குறித்தும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்தக் கலந்துரையாடலின் பின்னர், அவர்கள் குழு புகைப்படத்திலும் இணைந்துகொண்டனர்.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசுப், ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2025-09-30

உலகின் மிக உயரமான பாலம் சீனாவில் திறப்பு

 

உல​கின் மிக உயர​மான பாலம் சீன நாட்​டில் திறக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் இது​வரை 2 மணி நேர​மாக இருந்த பயணம் வெறும் 2 நிமிடங்​களாக குறைந்​துள்​ளது.

சீனா​வின் குய்சோ மாகாணத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள பாலம் நேற்று அதி​காரப்​பூர்​வ​மாக திறக்​கப்​பட்​டுள்​ளது. இந்​தப் பாலத்​துக்கு ஹுவாஜி​யாங் கிராண்ட் கன்​யான் பாலம் என்று பெயர் வைக்​கப்​பட்​டுள்​ளது. தரை மட்​டத்​திலிருந்து 625 மீட்​டர் உயரத்​தில் இந்​தப் பாலம் அமைந்​துள்​ளது.

இரு மலைகளை இணைக்​கும் வித​மாக இந்​தப் பாலம் மிக​வும் அழகுட​னும், சிறப்​பாக​வும் அமைந்​துள்​ளது. இது​வரை இப்​பகு​தி​யைக் கடக்க 2 மணி நேரம் எடுத்​துக்​கொண்ட நிலை​யில் தற்​போது பாலத்​தின் உதவி​யால் இரண்டே நிமிடத்​தில் இப்​பகு​தி​யைக் கடந்து விட முடி​யும்.

இதற்கு முன்பு பெய்​பான்​ஜி​யாங் பகு​தி​யில் தரைமட்​டத்​திலிருந்து 565 மீட்​டர் உயரத்​தில் கட்​டப்​பட்டு இருந்த பாலமே உலகின் மிக உயர​மான பால​மாக இருந்​தது. தற்​போது இந்த ஹுவாஜி​யாங் கிராண்ட் கன்​யான் பாலம் 625 மீட்​டர் உயரத்​தில் அமைக்​கப்​பட்டு அந்த சாதனை முறியடிக்​கப்​பட்​டுள்​ளது. 2,900 மீட்​டர் நீளம் கொண்​ட​ இந்​தப் பாலம் 3 ஆண்​டு​களில் கட்டி முடிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து குய்சோ மாகாண போக்​கு​வரத்து முதலீட்டு குழு​மத்​தின் திட்ட மேலா​ளர் வூ ஜாவோமிங் கூறும்​போது, “625 மீட்​டர் உயரத்​தில் அமைந்​துள்ள இந்​தப் பாலம் பொறி​யியலின் அற்​புத​மாக திகழ்​கிறது.

இந்​தப் பாலத்தை பொது​மக்​கள் கண்​டு​களிக்க வசதி​யாக 207 மீட்​டர் உயரத்​தில் லிப்ட் அமைக்​கப்​பட்​டுள்​ளது. மேலும் பாலத்​தையொட்டி உணவகங்​கள், பாலத்தை பொது​மக்​கள் கண்​டு​களிக்க பிளாட்​பாரங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இது மிக விரை​வில்​ பிரபல​மான சுற்​றுலாத்​ தல​மாக ​மாறி சுற்​றுலாப்​ பயணி​களை வெகு​வாக ஈர்​க்​கும்​’’ என்​றார்​.

மரக்கறி விலைப்பட்டியல் (30.09.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (30) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

அடுத்த தேர்தலில் மொட்டு கட்சி ஆட்சி மலரும்!

அடுத்த தேசிய தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் என்று முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ சூளுரைத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அச்சம் அறியாத தலைவரே மஹிந்த ராஜபக்ச. அவர்போலவே தற்போது நாமல் ராஜபக்ச செயற்பட்டுவருகின்றார். நாடாளுமன்றத்தில் துணிவுடன் அரசியல் சமரில் ஈடுபடுகின்றனர்.

சபையில் மூவர் இருந்தாலும் தமக்குரிய பணியை மொட்டு கட்சியினர் திறம்பட செய்கின்றனர். நாமலின் துணிவுக்கு அஞ்சியே ஆளுங்கட்சியினர் அவரை குறிவைத்துள்ளனர். போலி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுவருகின்றன.

அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு நாம் அடிபணியமாட்டோம். எமது பயணம் தொடரும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மக்கள் சக்தியால் வலுப்படுத்தப்படும்.

அடுத்த தேசியமட்ட தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆட்சி மலரும். எமது கட்சியில் இருந்து ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தெரிவாவார்கள்.” – என்றார் மொட்டு கட்சி உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ கூறினார்.

ஜனாதிபதி அநுர, ஜப்பான் பிரதமர் சந்திப்பு!

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜப்பான் பிரதமர் அலுவலகத்தில் இன்று (29) காலை நடைபெற்றது.

ஜப்பான் பிரதமர் அலுவலகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவினால்(Shigeru ISHIBA) மகத்தான வரவேற்பு அளிககப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பானிய சுய பாதுகாப்புப் படையின் மரியாதையை ஏற்றுக்கொண்டதுடன், அந்த அணிவகுப்பை பார்வையிடவும் இணைந்தார்.

இருநாட்டு பிரதிநிதிகள் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு ஆரம்பமானது.

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்ட கால நெருங்கிய நட்புறவைத் தொடர்ந்து பலப்படுத்தி, இருநாடுகளுக்கும் இடையில் வர்த்தக,முதலீடு, பொருளாதார, அபிவிருத்தி உதவி மற்றும் வலய பாதுகாப்பு போன்ற விடயங்களை உள்ளடக்கும் வகையில் பல்வேறுபட்ட துறைகளிலான ஒத்துழைப்பை தொடர்ந்து பரவலாக்குவது குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

இரு தரப்பினருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவியை (Official Development Assistance) தொடர்ந்தும் பிரதிபலிக்கும் வகையில், பால் துறையில் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான திட்டம் (Project for the Enhancement of Productivity in the Dairy Sector) மற்றும் உத்தியோகபூர்வ பாதுகாப்பு உதவி(Official Security Assistance- OSA) திட்டம் குறித்த பரிமாற்று ஆவணம் கைச்சாத்திடும் நிகழ்வும் இதன்போது நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கூட்டு ஊடக சந்திப்பில் உரையாற்றிய ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா (Shigeru ISHIBA) இந்துசமுத்திரத்தில் கேந்திர முக்கியத்துவமான இடமாக அமைந்துள்ள இலங்கையின் ஸ்தீரத்தன்மை மற்றும் அபிவிருத்தி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அதற்கமைய இலங்கையுடனான கூட்டாண்மையை மேலும் மேம்படுத்தி விஸ்தரிக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அந்நியோன்ய நம்பிக்கை, கௌரவம் மற்றும் பலமான தொடர்பில் அடிப்படையிலே இலங்கை மற்றும் ஜப்பான் இடையிலான நீண்டகால நட்புறவு தங்கியுள்ளது. ஜப்பான் பிரதமருடனான பேச்சுவார்த்தை இலங்கை -ஜப்பான் இடையிலான தொடர்புகளின் முக்கிய மைல்கல்லை குறிப்பதாகவும் அந்த உடன்பாடுகளின் முழுமையான பலனை அடைந்து அபிவிருத்தி மற்றும் ஸ்தீரத்தன்மைக்கான பயணத்தில் ஜப்பானுடன் இணைந்து பணியாற்ற இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஜப்பான் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு, கடந்த பொருளாதார நெருக்கடியினால் இடையில் கைவிடப்பட்ட 11 அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பித்து அதன் பலனை மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்காக ஜப்பான் அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதிய கடன்மறுசீரமைப்பு திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்கு வழங்கிய ஒத்துழைப்பிற்காக ஜனாதிபதி இதன் போது ஜப்பானுக்கு நன்றி தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா இடையிலான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையின் பின்னர் இருதரப்பினால் கூட்டு அறிக்கையொன்று (Joint Statement) ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டன.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர், பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க,டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

காற்றாலைத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னாரில் மாபெரும் போராட்டம்

மன்னாரில் முன்னெடுக்கப்படும் காற்றாலைத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று மன்னாரில் பொது முடக்கமும் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியும் நடைபெற்றன.

மன்னாரில் காற்றாலை செயற்றிட்டத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் இருந்த மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலுக்குக் கடும் எதிர்ப்பை வெளியிடும் வகையிலும் மன்னாரில் பொது முடக்கமும் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியும் இன்று இடம்பெற்றன.

இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் நகர சபை பொது மைதானத்தில் ஆரம்பமாகிய பேரணி, மன்னார் பிரதான வீதியூடக பஸார் பகுதிக்குச் சென்று மாவட்ட செயலகத்துக்கு முன்பாக பல்லாயிரக்கணக்கான மக்களுடன் பல கோஷங்களை எழுப்பியவாறு மாபெரும் போராட்டம் இடம்பெற்றது.

போராட்டத்தின் இறுதியில் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஜனாதிபதிக்கு கையளிக்கும் வகையில் மன்னார் மாவட்ட அரச அதிபரிடம் கையளித்தோம் என்று மன்னார் பிரஜைகள் குழு தெரிவித்துள்ளது.

இன்றைய போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் மதகுருமார்களும், அரசியல்வாதிகளும் கலந்துகொண்டனர்.

மன்னார் தீவில் கை வைத்துள்ள அரசு நாளை கச்சத்தீவையும் தாரைவார்க்கலாம்!

மன்னார் தீவில் இன்று கை வைத்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், நாளை கச்சத்தீவைக்கூட இந்தியாவுக்கு வழங்குவதற்கு முன்வரக்கூடும் என்று மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர் வசந்த முதலிகே தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தேசிய வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்கப்படாது எனக் கூறியே தேசிய மக்கள் சக்தி ஆட்சிபீடமேறியது. ஆனால் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலே ஆட்சியாளர்களால் இங்கு அமுல்படுத்தப்பட்டுவருகின்றது.

இந்தியாவுடன் கடந்த ஏப்ரல் மாதம் ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. அவை எவ்வாறான ஒப்பந்தங்கள் என்பது பற்றி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு இன்னும் பகிரங்கப்படுத்தவில்லை. இதற்கமைய மன்னார் தீவைக் கைப்பற்றுவதற்கு இந்தியா திட்டம் தீட்டியுள்ளது.

மன்னாரில் பாரிய சுற்றாடல் பாதிப்பு ஏற்படக்போகின்றது. மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு தாக்கங்கள் ஏற்படப்போகின்றது. இவை பற்றி ஆட்சியாளர்களுக்கு கவலை இல்லை. எதிரணியில் இருந்தபோது மன்னார் நிலைவரம் பற்றி கதைத்தனர். ஆட்சிக்கு வந்த பின்னர் அவற்றை மறந்துவிட்டனர். இன்று மன்னார் மக்கள் வீதிக்கு வந்துள்ளனர். மக்கள்மீதுகூட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுதான் மறுமலர்ச்சியா?

இலங்கையின் கடல்வளத்தை இந்தியா கொள்ளையடிக்கின்றது. இதற்கு இலங்கை மீனவர்கள் நீதிகோரியபோதும் அரசாங்கம் மௌனம் காக்கின்றது.

கச்சத்தீவு விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. ஜனாதிபதி அண்மையில் கச்சத்தீவு சென்றிருந்தார். அதனை இந்தியாவுக்கு வழங்கமாட்டோம் எனக் கூறி இருந்தார். தான் கூறுவதற்கு எதிரானதையே ஜனாதிபதி செய்துவருகின்றார். எனவே, வழங்கமாட்டேன் எனக் கூறினாலும் கச்சத்தீவையும் வழங்கிவிடுவார்களோ என்ற அச்சம் எமக்கு உள்ளது. உள்ளக ரீதியில் பேச்சு நடக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது. “- என்றார் வசந்த முதலிகே.

கம்பளை பகுதியில் இரு வீடுகளில் ஐஸ் போதைப்பொருள் மீட்பு: தம்பதியினர் குறித்து தீவிர விசாரணை!

 

ஐஸ் போதைப்பொருள் சகிதம் கைது செய்யப்பட்ட கம்பளை தம்பதியினர் தங்கியிருந்த மூன்று வீடுகளை சோதனையிட்ட பொலிஸார், ஐஸ் போதைப்பொருள் மற்றும் உபகரணங்கள் என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.

கம்பளையில் இருந்து கினிகத்தேனைவரை ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதியினர் கடந்த 25 ஆம் திகதி நாவலப்பிட்டியவில் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் நாவலப்பிட்டிய நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். கணவனுக்கு 7 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவு பொலிஸாரால் பெற்றப்பட்டிருந்தது. ஐந்து மாத கர்ப்பிணியான மனைவி எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் 22 வயதான கணவரை அழைத்துக்கொண்டு, அவர்கள் தங்கி இருந்த மூன்று வீடுகளை நேற்றும், இன்றும் பொலிஸார் சோதனைக்குட்படுத்தினர். இதன்போது இரு வீடகளில் இருந்து ஐஸ்போதைப்பொருள், உபகரணங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

கம்பளை, துனுகேஉல்ல வீதியில் உடகம – அங்கெலபிட்டிய பகுதியிலுள்ள வீடு, கம்பளை, தொலஸ்பாகை வீதியில் சிங்ஹாபிட்டிய பகுதியில் உள்ள வீடு என்பவற்றை சோதித்தபோதே ஐஸ் பக்கெட்டுகள் மற்றும் உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரான ஆண் இரு திருமணங்கள் செய்துள்ளார். முதல் மனைவிக்கு 15 மாத குழந்தையொன்று உள்ளது என தெரியவந்துள்ளது.

க.யோகா

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிநடை தொடருமா?

0
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நியூ சண்டிகர் முலான்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்...

ஈரானியர்களின் தற்துணிவை பாராட்டிய புடின்!

0
நாட்டின் இறையாண்மைக்காக போராடும் ஈரான் மக்களின் தற்துணிவை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பாராட்டியுள்ளார். ஈரான் வெளிவிவகார அமைச்சர் நேற்று தன்னை சந்தித்து பேச்சு நடத்தியபோதே அவர் இவ்வாறு பாராட்டியுள்ளார். அத்துடன், அமைதி முயற்சி வெற்றியளிப்பதற்கு...

மரக்கறி விலைப்பட்டியல் (28.04.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...