Home Blog Page 49

தென்னாபிரிக்காவிடம் மண்கவ்வியது மேற்கிந்திய தீவுகள் அணி!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் தேசிய கிரிக்கெட் அணி 83 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து கடுமையாக தடுமாறியது.

எனினும், ஹோல்டர் – சைபர்ட் இணை அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்க முக்கிய பங்காற்றியது. இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 8வது விக்கெட்டுக்கு 89 ஓட்டங்கள் சேர்த்தனர்.

இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ஓட்டங்கள் எடுத்தது.

177 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, ஒரு விக்கெட் இழப்பிற்கு 16.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை உறுதிப்படுத்தியது.

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மஹராஜ் சீதை அம்மன் ஆலயத்தில் வழிபாடு!

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சுவாமி கைலாசநந்த் கிரிஜி மஹராஜ் உட்பட்ட குழுவினர் (26.02.2026) நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்து விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இன்று 26.02.2026 காலை 12.30 மணியளவில் உலங்கு வானூர்தி மூலமாக பொலன்னறுவையில் இருந்து நுவரெலியா மாநகர சபை பொது விளையாட்டு மைதானத்திற்கு வந்திரங்கிய சுவாமிகள் உட்பட்ட குழுவினரை நுவரெலியா மாநகர சபை முதல்வர் உபாலி வணிகசேகர மற்றும் பிரதி முதல்வர் சட்டத்தரணி சிவன்ஜோதி யோகராஜா உள்ளிட்ட மாநகர சபை குழவினர் வரவேற்றனர்.

அங்கிருந்து சுவாமிகள் நுவரெலியா பதுளை பிரதான வீதியூடாக வாகன பேரணி மூலமாக சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்கு பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் அழைத்து வரப்பட்டார்.ஆலயத்தில் நிரவாக சபை தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் உட்பட்ட நிர்வாக சபை உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து வரவேற்றனர்.

இதன்போது சுவாமிகளுடன் வெளிநாட்டு வேலைவாபய்ப்ப மற்றும் சுற்றுலாதுறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஸ்ணன் கலைச்செல்வி மற்றும் பொது மக்களும் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.சுவாமி ஆலத்தில் நாள்தோறும் முன்னெடுக்கப்படுகின்ற அன்னதானத்தை ஆரம்பித்து வைத்ததுடன் பக்தர்களுக்கு ஆசீர்வாதமும் வழங்கினார்.

தொடர்ந்து சீதையம்மன் ஆலயத்தின் பிரதம குருக்கள் ரஜீவன் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகளை முன்னெடுத்தார்.அதனை தொடர்ந்து ஆலய நிர்வாக சபையினால் சுவாமிக்கு ஆலயத்தின் சார்பாக நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது. சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ் இந்தியாவின் அண்மையில் நடைபெற்ற கும்பமேலா நிகழ்வின் ஏற்பாட்டாளர்களில் பிரதான பங்கு வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேரளா மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

கேரளா மாநிலத்​தின் பெயரை ‘கேரளம்’ என்று மாற்​று​வதற்​கு, பிரதமர் மோடி தலை​மையி​லான மத்​திய அமைச்​சரவை ஒப்​புதல் வழங்கி உள்​ளது.

கேரளா மாநிலத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது.

முன்​ன​தாக கேரளா என்ற மாநிலத்​தின் பெயரை, ‘கேரளம்’ என்று மாற்​றப்​படும் என்று மாநில அரசு தீர்​மானம் நிறைவேற்​றியது.

அந்​தத் தீர்​மானத்​தில், அரசி​யலமைப்​புச் சட்​டப் பிரிவு 3-ன்​படி மாநிலத்​தின் பெயரை கேரளம் என்று மாற்​று​வதற்கு அனு​ம​திக்க வேண்​டும் என்று கோரி​யிருந்​தது.

இந்​நிலை​யில், பிரதமர் மோடி தலை​மை​யில் மத்திய அமைச்​சர​வைக் கூட்​டம் டெல்​லி​யில் நேற்று முன்தினம் நடை​பெற்​றது.

இந்​தக் கூட்​டத்​தில் கேரளா மாநில பெயரை கேரளம் என்று மாற்​று​வதற்கு ஒப்​புதல் வழங்​கப்​பட்​டது. இதையடுத்​து, கேரள சட்டமூலம் 2026-ஐ மாநில சட்​டப்​பேர​வைக்​குக் குடியரசுத் தலை​வர் பரிந்​துரைப்​பார்.

கேரளா மாநில சட்​டப்​பேர​வை​யின் கருத்​துகளைப் பெற்ற பிறகு மத்​திய அரசு அடுத்​தக்​கட்ட நடவடிக்கை எடுக்​கும்.

பெயர் மாற்​றம் தொடர்​பான மசோ​தாவுக்கு குடியரசுத் தலை​வரின் ஒப்​புதல் பெற்று நாடாளு​மன்​றத்​தில் மத்​திய அரசு தாக்​கல் செய்து நிறைவேற்​றும்.

இந்த நடை​முறை​கள் முழுமை பெற்​றவுடன், கேரளம் என்ற பெயர் அதி​காரப்​பூர்​வ​மாக அறிவிக்​கப்​படும்.

சுரேஷ் சலே கைது: கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளமை கத்தோலிக்கத் திருச்சபை வரவேற்றுள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணை அடிப்படையிலேயே சுரேஷ் சலே நேற்று கைது செய்யப்பட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றது.

இந்நிலையிலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து பொறுப்புக்கூறலை வலியுறுத்தி வரும் கத்தோலிக்கத் திருச்சபை , கைது நடவடிக்கையை வரவேற்றுள்ளது.

கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னான்டோ Fernando வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

“ விசாரணைகள் தொடர்கின்றன என்பதற்கான அறிகுறியாக இந்த கைது நடவடிக்கை அமைந்துள்ளது.
எங்களுக்குத் தேவையானது ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மை.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.” எனவும் அருட்தந்தை குறிப்பிட்டார்.

ஜேர்மன், ருமேனியாவுக்குரிய பயணத்தை ஆரம்பித்தார் விஜித ஹேரத்!

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று ஜெர்மனி மற்றும் ருமேனியாவிற்கான பயணத்தை மேற்கொள்கிறார்.

இன்று முதல் பெப்ரவரி 28 ஆம் திகதிவரை ஜெர்மனிக்கும், மார்ச் 1 ஆம் திகதி முதல் ருமேனியாவிற்கும் அவர் பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மன்-ஆசிய பசுபிக் வணிக சங்கத்தின் பிரெமன் பிரிவினால் வழங்கப்பட்ட அழைப்பின் பேரில், வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான தொடர் கூட்டங்களில் வெளிவிவகார அமைச்சர் பங்கேற்பார்.

இந்தப் பயணத்தின் போது ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வடேபுல்லுடன், அமைச்சர் விஜித ஹேரத் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

இதையடுத்து, மார்ச் 1 ஆம் திகதி முதல் 3 ஆம்திகதி வரை வெளிவிவகார அமைச்சர், ருமேனியாவுக்கு பயணம் மேற்கொள்வார்.

அவர் ருமேனியாவின் வெளியுறவு, தொழிலாளர், குடும்பம், இளைஞர் மற்றும் சமூக ஒற்றுமை மற்றும் பொருளாதாரம், டிஜிட்டல் மயமாக்கல், தொழில்முனைவோர் மற்றும் சுற்றுலா அமைச்சர்களுடன் உயர் மட்ட கலந்துரையாடல்களை நடத்துவார்.

தொழிலாளர் துறையில் ஒத்துழைப்பு குறித்த இருதரப்பு புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றும் இதன் போது கையெழுத்திடப்படவுள்ளது.

மத்திய கிழக்கில் இன்னும் தணியவில்லை போர் பதற்றம்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் போக்கு மற்றும் அணுசக்தி திட்டங்கள் குறித்த கருத்து வேறுபாடுகளால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதனால் ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் தங்களது தூதரக அதிகாரிகளின் குடும்பத்தினரையும் குடிமக்களையும் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளன.

பாதுகாப்பு காரணங்களுக்காகப் பல்வேறு சர்வதேச விமான நிறுவனங்கள் அந்தப் பிராந்தியத்திற்கான தங்களது சேவைகளை நிறுத்தியுள்ளன.

ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தடுக்கப்போவதாக அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில், ஈரான் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது.

இப்பகுதியின் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதால், பல நாடுகள் தங்களது பயண ஆலோசனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் உயரிய விருது பெற்றார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக இஸ்ரேல் நாட்டுக்குச் சென்றுள்ளார். சிறப்பு விமானம் மூலம் இஸ்ரேல் சென்ற அவருக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நேரில் சென்று உற்சாக வரவேற்பு அளித்தார்.

இதையடுத்து, பிரதமர் மோடி இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு சிறப்பு விருந்தினராகச் சென்று உரையாற்றினார். இதனால் அங்கு இந்திய தேசிய கொடியின் மூவர்ணங்களில் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அந்நாட்டு சபாநாயகர் உயரிய விருதை அளித்து கௌரவித்தார்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளின் உயரிய விருதுகளைப் பெற்ற ஒரே உலக தலைவர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட வேண்டும்: அப்பாவியை பலிகடாவாக்க இடமளியோம்!

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆளுங்கட்சி கூறிய பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட வேண்டும். மாறாக அப்பாவியை பலிகடாவாக்கி பிரதான சூத்திரதாரியாக காண்பிப்பதற்கு அரசாங்கம் முற்பட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.”

இவ்வாறு முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

“புலிகளை தோற்கடிப்பதற்கு தீர்க்கமான பங்களிப்பை வழங்கிய படைவீரர்தான் சுரேஷ் சலே.

எனவே, அவரை பழிவாங்க வேண்டும் என்ற தேவைப்பாடு பிரிவினைவாத சக்திகளுக்கு இருந்தது. சனல் 04 ஊடகத்தை பயன்படுத்தி அவருக்கு எதிராக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.

பிள்ளையான் மற்றும் சுரேஷ் சலே ஆகியோரை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே அரசாங்கம் கைது செய்ய இருந்தது.

எனினும், ரணில் விக்கிரமசிங்க நியமித்த இமாம் குழுவின் அறிக்கையை என்.பி.பி. ஆட்சிகாலத்தில் நான் வெளியிட்டதால் அந்த கைது இடம்பெறவில்லை.” எனவும் உதய கம்மன்பில சுட்டிக்காட்டினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் நான்கு வருடங்களாகின்றன. எனவே, அடுத்த மாதம் இது பற்றி பேசப்படும்.

கடந்த ஏப்ரல் மாதம் பிள்ளையானை கைது செய்தனர். இம்முறை சுரேஸ் சலேவை கைது செய்துள்ளனர்.
ஏப்ரல் மாதமே இக்கைது இடம்பெற்றிருக்கும். எனினும், நிலக்கரி மோசடியை திசை திருப்புவதற்காகவே அது முன்கூட்டியே நடந்துள்ளது.

அரசாங்கம் கூறியதுபோல பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட வேண்டும். மாறாக அப்பாவியை பலிகடாவாக்கி பிரதான சூத்திரதாரியாக காண்பிப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டால் அதற்கு எதிராக நாம் முன்னிலையாவோம்.” – என கம்மன்பில மேலும் குறிப்பிட்டார்.

தென்னாபிரிக்கா, மே.தீவுகள் இன்று மோதல்!

T20 உலகக்கிண்ணத் தொடரில் இன்று (26) நடைபெறும் முக்கிய போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டி Narendra Modi Stadium மைதானத்தில் இன்று மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

சூப்பர் 8 சுற்றில் இரு அணிகளும் தாங்கள் விளையாடிய முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.

தென்னாபிரிக்கா அணி இந்தியாவை வீழ்த்தியிருந்தது.

அதேவேளை, மேற்கிந்திய தீவுகள் அணி சிம்பாப்வேயை தோற்கடித்து தன்னம்பிக்கையுடன் உள்ளது.

இன்றைய போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி பெற்றால், அரையிறுதி வாய்ப்பை நோக்கி இந்திய அணிக்கு சாதகமான நிலை உருவாகும் என்பதால், இந்த மோதல் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

இலங்கை வருகிறார் இந்திய துணை ஜனாதிபதி!

0
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்திய துணை ஜனாதிபதி சி....

புதன்கிழமை விடுமுறை இரத்து!

0
  "எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்துச் சிரமங்களைக் கருத்திற்கொண்டு அரச ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசேட புதன்கிழமை விடுமுறை, எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் இரத்துச் செய்யப்படுகின்றது" என்று அத்தியாவசிய...

நுவரெலியா கிரகரி வாவியிலிருந்து சடலம் மீட்பு!

0
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் உள்ள கிரகரி வாவியிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று (06) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரகரி வாவியில் படகு சவாரியில் ஈடுபடுவோர்...