ஈரான் உடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்ததற்காக அமெரிக்கஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு , பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்துள்ளார்.
தற்போதைய ராஜதந்திர முயற்சிகள் தொடர இந்த முடிவு உதவும் என்று அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அமைதிச் சூழல் நீடிப்பதை உறுதி செய்ய பாகிஸ்தான் தொடர்ந்து மத்தியஸ்தம் மற்றும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருக்கும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின் மூலம் இந்த மோதலுக்கு ஒரு நிரந்தர தீர்வு எட்டப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.










