PET பிளாஸ்டிக்; பெரும் சொத்தாகும்

நாம் வாழும் இந்த பூமிக்கு எம்மைப்போல் வேகமாக ஓட முடியாது. ஒரு வருடத்தில் நாம் உட்கொள்ளும் நுகர்வுப் பொருட்களை உற்பத்தி செய்ய பூமிக்கு ஒருவருடமும் எட்டு மாதங்களும் ஆகுமென குளோபல் ஃபுட் பிரிண்ட் நெட்வொர்க்கின் தகவல் தெரிவிக்கிறது. உண்மையிலேயே ‘எடுத்தல் – தயாரித்தல் – வீசுதல்’ எனும் மாதிரிகளைத் தாண்டி நாங்கள் பார்க்க வேண்டும், மேலும் உலகில் மிகவும் சர்ச்சைக்குரிய விடயமான பிளாஸ்டிக்கை இன்னும் நெருக்கமாகப் பார்ப்பதும் இதில் அடங்கும்.

அனைத்து பிளாஸ்டிக் வகைகளையும் மீள்சுழற்சி செய்ய முடியாது. எனினும், மீள் சுழற்சி அடையாளத்தில் முதலாம் இடத்தைப் பிடித்துள்ளதனால் உங்களுக்கு இலகுவாக அடையாளம் கண்டுகொள்ளக் கூடிய பொலியெதிலின் டெரெஃப்தலேட் (Polyethylene Terephthalate) – (PET) பிளாஸ்டிக் உலகில் மிகவும் மீள் சுழற்சி செய்யும் பிளாஸ்டிக் என்பதுடன் அது உலகில் மீள்சுழற்சி செய்யும் சந்தையில் 57%ற்கும் அதிகமான அளவில் மேற்கொள்ளப்படுகின்றது. 2025 நிறைவடைகையில் மீள்சுழற்சி செய்யப்படும் PET பிளாஸ்டிக்கின் பெறுமதி 66.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என எதிர்பார்க்கப்படுவதோடு (பொதுநலவாய நாடுகளின் விஞ்ஞான மற்றும் தொழிற்சாலை ஆய்வு அமைப்பு, 2017) PET பிளாஸ்டிக் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு அதிகமாவது மிகவும் முக்கியமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக, PET மிகவும் எதிர்க்கும், இலகுரக மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள், ஆடைகள், வீட்டு உபகரணங்கள், கட்டுமானப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் நாடாக்கள் போன்றவற்றைத் தயாரிக்க மீண்டும் மீண்டும் மறுசுழற்சி செய்யலாம். இலங்கைக்குள் மறுசுழற்சி செய்யப்பட்ட PETஇன் பெரும் பகுதி தற்போது Polymer துகள், மற்றும் Pelletகள் ஆக ஏற்றுமதி செய்யப்படுகின்றது, அவை பிற தயாரிப்புக்களின் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகின்றன – அதாவது மீள் சுழற்சி செய்யப்பட்ட PET (rPET) தயாரிப்புக்கள் ஆகும். நாட்டிற்குள் மீள் சுழற்சி செய்யப்பட்ட PET துகள்கள் ஆடைகள், ஆடை அணிகலன்கள், விளையாட்டு உடைகள், விளக்குமாறு மற்றும் தூரிகைகள் என்பவற்றுக்கு பயன்படுத்தப்படுவதோடு, மேலும் அவை உயர்தர நவநாகரீக அலங்கார தயாரிப்புப் பொருட்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

DCIM100GOPROGOPR1016.JPG

குப்பை என்பது ஒரு சொத்தாகும்; PET பிளாஸ்டிக் சேகரிப்பவரின் கதை

ஷாந்தி நிலைத்தன்மை மேம்பாடானது (Shanthi Sustainable Development) நாம் வாழும் இலங்கை முழுவதிலும் உள்ள வர்த்தகங்கள் மற்றும் உள்நாட்டு சமூகத்தினருக்கு மூலப்பொருட்கள் நிர்வாகம் குறித்த பூரண தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் வியாபாரமாகும். நாம் உட்பட ஐந்து உறுப்பினர்களுடன் கூடிய எமது குழுவிற்கு எமது சுற்றாடல் ஆலோசகர் மற்றும் மேலும் பிளாஸ்டிக் சேகரிப்போர் இருவர் அடங்குவதுடன் பொதுவாக நாம் அனைவரும் 60,000 PET போத்தல்களை சேகரிப்போம். 2019 நவம்பர் மாதம் எமது நடவடிக்கைகளை ஆரம்பித்து ஒரு வருடகாலத்திற்குள்ளேயே எமக்கு குப்பை என்பது ஒரு செல்வமாகவே உள்ளது. எமது வர்த்தக நடவடிக்கைகளின் ஊடாக சுற்றாடல் மீது எமக்குள்ள பொறுப்பினை புரிந்து கொள்ள முடிந்துள்ளது. மிகச் சிறந்த மூலப் பொருள் நிர்வாகத்திற்கு சிறந்த பொறிமுறையொன்றை உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக உள்நாட்டு அரசசார்பற்ற நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், நகரசபை, வர்த்தகங்கள் மற்றும் சமூகத்தினர் போன்ற நாட்டின் பல்வேறு பிரிவிற்கு எமது வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும் உங்களுடைய வீடுகளில் இருந்து வீசப்படும் அனைத்து கழிவுப் பொருட்களையும் சேகரிக்க, உங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள போத்தல் பத்திரிகை சேகரிப்பாளருடனும் இணைந்து செயற்படுகின்றோம். பயன்படுத்தப்படும் PET பிளாஸ்டிக் உள்ளுராட்சி மன்றங்களின் மூலம் மேற்கொள்ளப்படும் கரையோர தூய்மைப் படுத்தல், குப்பைக் கூலங்கள், பிரதேச சுற்றாடல் சந்தை, நகர சபையினால் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் பிரதேசத்திலுள்ள வர்த்தக நிறுவனங்கள் போன்ற பல்வேறு இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்டதன் பின்னர் சேர்க்கப்படும் எகோ ஸ்பின்டில்ஸ் தனியார் நிறுவனம் போன்ற மூலப்பொருள் மீள் சுழற்சி செய்வோரிடம் கொண்டு செல்வதற்கு முன்னர் இதிலுள்ள துருபிடிக்காத பொருட்களை நன்றாக சுத்தம் செய்வதற்கு எமது களஞ்சியங்களுக்கு அனுப்பப்படும்.

PET பிளாஸ்டிக் தயாரிப்பில் வாழ்க்கை சுழற்சி தொடர்ச்சியாக மாற்றமடைந்து வருகின்றதுடன், இது உற்பத்தியாளரிடமிருந்து ஒரு நுகர்வாளர், சேகரிப்பாளர் மற்றும் மீள் சுழற்சி செய்பவர்களினால் பின்னர் மீண்டும் ஒரு புதிய தயாரிப்பாக சந்தைக்கு வருகிறது. PET விரிவான மதிப்புச் சங்கிலியை உருவாக்குவது மட்டுமல்லாமல், பல தனி நபர்களுக்கும் வர்த்தகங்களுக்கும் வாழ்வாதார வாய்ப்புக்களை வழங்குகிறது. இதை அறிந்தால் உள்ளுர் சமூகங்களுக்குள் சிறந்த சேகரிப்பு மற்றும் மீள் சுழற்சி செய்வது எமது பொறுப்பாகும். இறுதியில் PET முகாமைத்துவம் மற்றும் மீள் சுழற்சி பிராந்திய மையமாக இலங்கையும் பங்குவகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரச்சினை PETஇல் அல்ல, பொறுப்பற்ற மீள் சுழற்சியே

நாடு முழுவதையும் உள்ளடக்கிய விதமாக மேற்கொள்ளப்படும் ஊடகங்களின் கவனம், விழிப்புணர்வு பிரசாரங்கள் மற்றும் நகர சபைகளின் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் மக்களுக்கு PET பிளாஸ்டிக்கின் மீள் சுழற்சி தன்மை குறித்த அறிவைப் பொருத்தவரை விசேடமாக PET பிளாஸ்டிக் தயாரிப்பு சரியான விதத்தில் மீள் சுழற்சி செய்தால் எந்தளவுக்கு வெற்றியளிக்கும் என்பது குறித்து தெளிவான அறிவொன்று இல்லை. ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் ஆய்வுகள் மற்றும் தொழில்நுட்ப சஞ்சிகையின் (2020) குறிப்பு படி, மேல் மாகாணத்தில் மாத்திரம் ஒவ்வொரு நாளும் சுமார் 3,500 மெற்றிக் தொன் (MT) கெட்டியான கழிவுகள் சேர்வதுடன், அவற்றில் 2,400 மெற்றிக் தொன் சேகரிக்கப்படுகிறது. இதில் சுமார் 15% வரையான தொகை உரமாக மாற்றப்படுவதுடன் 10% மீள் சுழற்சி செய்யப்பட்டு 75%மானவை குப்பைக் கொட்டும் பொது இடங்களுக்கு போடப்படுகின்றன. தற்போது மீள் சுழற்சிக்காக சேர்க்கப்படுவதில் இலங்கையில் PET பிளாஸ்டிக்கில் 20-25% ஆகும். மீதியாகவுள்ளவை எரிக்கப்பட்டு, நிலப்பரப்புக்களிலும், இறுதியாக நமது நீர்வடிகாண்களில் முடிவடைகின்றன. இந்த முறைமை மாற வேண்டும்.

நாம் நடவடிக்கைகளை ஆரம்பித்து ஒரு வருடகாலத்தை நெருங்கும் இந்த காலப்பகுதியில் பல்வேறு வகையான வாடிக்கையாளர்களை கண்டு உரையாடியதன் பின்னர் தெளிவாக புரிந்து கொண்ட ஒரு விடயம் என்னவென்றால், தொகுதிகளாக பிரித்தல் மற்றும் பொறுப்புள்ள மீள் சுழற்சி குறித்து மேலதிக அறிவு மற்றும் புரிந்துணர்வு நாட்டிற்கு முக்கியமாகவுள்ளது என்பதாகும். இந்த சிக்கலானது PETஇன் நுகர்வுக்கு அப்பாற்பட்டது. கழிவு சேகரிப்பு, பிரித்தல் மற்றும் மீள் சுழற்சி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள பல நபர்களை உற்சாகப்படுத்த ஒரு வலையமைப்பை உருவாக்குவதை நாம் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். எம்மைப்போன்ற வர்த்தகங்கள் இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள குப்பை தொடர்பான சிக்கலைத் தீர்க்கும் முயற்சியில் பங்களிப்பு செய்வது மட்டுமல்லாமல் அவை பலருக்கு வேலை வாய்ப்புக்களையும் வழங்குகின்றன, மேலும் சமூக வளர்ச்சிக்கு பங்களிக்கும் ஒரு முழு சுற்றுச் சூழல் அமைப்பையும் உருவாக்குகின்றன. விடயங்களை மேற்கொள்வதற்கான எங்களது வழிகளின் வரம்புகளை எட்டுகிறது. இதுகுறித்து தீர்க்கமாக சிந்திக்க வேண்டிய நேரம் இதுவாகும்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles