பொகவந்தலாவயில் குளவிக்கொட்டு – ஐவர் பாதிப்பு

பொகவந்தலாவ கிலானி தோட்டத்தில், தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் ஐவர் குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில், பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வனர்த்தம் இன்று (6) மதியம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தேயிலை மலையில் கற்குகை ஒன்றில் கூடுகட்டியிருந்த குளவிகளே, கலைந்துவந்து தாக்கியுள்ளன.

பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்

Related Articles

Latest Articles