விசேட சுற்றுலா வலயமொன்றை உருவாக்க முன்மொழிவு!

“தேயிலை பயிர்ச்செய்கை சார்ந்த சுற்றுலாத் தொழில்” குறித்தும் ஆராய்வு!

இலங்கை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணி, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரதின் தலைமையில் இன்று (16) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.

சுற்றுலாத்துறையில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் தடைகளை நீக்கி, இலங்கையை ஒரு நிலையான சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கான திட்டங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களை இணைத்து விசேட சுற்றுலா வலயமொன்றை உருவாக்குவதற்கான முன்மொழிவு குறித்து இங்கு விசேடமாக ஆராயப்பட்டது.

இதன்கீழ் தெற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களை இணைத்து, சிங்கராஜ, கன்னெலிய,தெதியகல, நாகியாதெனிய வனப்பகுதி மற்றும் ஹினிதும மலைத்தொடர் ஆகியவற்றை மையமாகக் கொண்ட விசேட சுற்றுலா வலயம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

தற்பொழுது அந்த வலயத்திற்குள் முறையற்ற விதத்தில் நிர்மாணிக்கப்படும் ஹோட்டல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தி, அதன் இயற்கைத் தன்மையைப் பாதுகாக்கும் வகையில் ஒழுங்குமுறை கட்டமைப்பொன்றைத் தயாரிப்பதே இதன் நோக்கமாகும்.

இந்த வலயத்திற்குள் தேயிலை பயிர்ச்செய்கை சார்ந்த சுற்றுலாத் தொழில் மற்றும் சூழல் சார்ந்த சுற்றுலா நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய கூட்டுச் செயல்பாட்டுக் குழுவொன்றை அமைப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

கடல்சார் சுற்றுலா மற்றும் பயணிகள் போக்குவரத்து சேவைகளின் கீழ், Capital Marine and Civil Construction (CMC) நிறுவனத்தினால் 10 வருட காலப்பகுதியில் 03 கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள கடல்சார் சுற்றுலா வழித்தடம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதன் முதற்கட்டமாக, வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட பயணிகள் படகுச் சேவைகளை (Ferry services) ஆரம்பித்து, பின்னர் அதனை கொழும்பு மற்றும் காலி வரை விரிவுபடுத்துவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.

சினிமா சுற்றுலாத்துறையை (Film Tourism) மேம்படுத்துவது குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. வெளிநாட்டுத் திரைப்படக் குழுவினர் இலங்கைக்குள் படப்பிடிப்புகளை நடத்துவதற்கான அனுமதிகளைப் பெறுவதில் எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வுகளை வழங்குவதுடன், ஒரே இடத்தில் அனுமதியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ‘ஒற்றைச் சாளர’ (Single Window) முறையைச் செயல்படுத்துவதன் முன்னேற்றம் குறித்தும் இங்கு மீளாய்வு செய்யப்பட்டது. திரைப்பட உபகரணங்களை தற்காலிகமாக நாட்டிற்குள் கொண்டு வருவதில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

விமானப்படை, சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை மற்றும் சுற்றுலாச் சபை ஆகியன இணைந்த கூட்டுத் திட்டத்தின் மூலம், கொக்கல விமான நிலையத்தை மையமாகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்ட வான்வழி சாகச விளையாட்டை (Skydiving) மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், திமிங்கிலங்கள் மற்றும் டொல்பின்களைப் பார்வையிடுவதற்கான புதிய வழிகாட்டுதல்கள் தயாரித்து முடிக்கப்பட்டுள்ளதுடன், அந்தத் துறையை முறைப்படுத்துவதற்கும் இணையவழிப் பதிவு முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இக்கூட்டத்தில் வெளிப்படுத்தப்பட்டது.

கொழும்பு நகரின் இரவு நேர சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், மரைன் டிரைவ் பகுதியில் வார இறுதியில் நடத்தப்படும் Marine Night நிகழ்ச்சித் திட்டம் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் விசா மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க,பாராளுமன்ற உறுப்பினர்களான உபுல் கித்சிரி, டி.கே. ஜயசுந்தர, லால் பிரேமநாத் ஆகியோரும், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் பதில் செயலாளர் ஹிமாலி அருணாதிலக, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மல்காந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட அரச அதிகாரிகளும், பாதுகாப்புப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகளும், ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைவர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி கிரிஷான் பாலேந்திர உள்ளிட்ட சுற்றுலாத்துறையின் முக்கிய பங்குதாரர்கள் பலரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles