இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரை உடனடியாகப் பதவி விலகுமாறு வலியுறுத்தி, ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த குழுவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொழும்பிலுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைமையகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், சட்டத்தரணிகள் சங்கத் தலைவரின் உடனடி ராஜினாமாவை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி இருந்தன
சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு எதிராக கடும் விமர்சனங்களையும் முன்வைத்தனர். எதிரணியின் தேவைக்கேற்பவே அவர் செயல்படுகின்றார் எனவும் வலியுறுத்தினர்.










