பதிலடி! வளைகுடாவில் 8 பாலங்களை தகர்க்க ஈரான் திட்டம்!!

ஈ​ரானின் மிகப் பெரிய பாலத்தை அமெரிக்கா தகர்த்​த​தால், வளை​குடா நாடு​களில் உள்ள 8 பாலங்களை தகர்க்​கப்​போவ​தாக ஈரான் எச்​சரித்துள்ளது.

ஈரான் தலைநகர் டெஹ்​ரானை​யும், கராஜ் நகரை​யும் இணைக்​கும் வகை​யில் 136 மீட்​டர் உயரத்​துக்கு கட்​டப்​பட்டு வந்த பி1 என்ற பாலத்​தின் மீது அமெரிக்கா நேற்று குண்டு வீசி​யது.

இதில் பாலத்​தின் ஒரு பகுதி தகர்ந்​தது. இந்த தாக்​குதலில் 8 பேர் உயி​ரிழந்​தனர், 95 பேர் காயம் அடைந்​தனர்.

இது குறித்து சமூக ஊடகத்​தில் கருத்து தெரி​வித்த அதிபர் ட்ரம்ப்,

“‘ஈரானின் மிகப் பெரிய பாலம் தகர்க்​கப்​பட்​டது. அதை மீண்​டும் பயன்​படுத்த முடி​யாது.

அமெரிக்கா​வுடன் ஈரான் ஒப்​பந்​தம் செய்​யா​விட்​டால், ஈரானில் ஒன்​றும் இருக்​காது’’ என கூறி​யிருந்​தார்.

இதற்கு எக்ஸ் தளத்​தில் பதில் அளித்​துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்​பாஸ் அராக்​சி, ‘‘பொது கட்​டமைப்​பு​கள் மீது தாக்​குதல் நடத்​து​வதன் மூலம் ஈரானியர்​களை சரணடைய வற்​புறுத்த முடி​யாது. இது எதிரி தோல்​வியடைந்​ததை​தான் காட்​டு​கிறது’’ என்​றார்.

இந்​நிலை​யில் குவைத்​தில் உள்ள ஷேக் ஜாபர் அல்​-அகமது அல்​-சபா கடல் பாலம், ஐக்​கிய அரபு அமீரகத்​தில் உள்ள ஷேக் சையது பாலம், அல் மக்தா பாலம் மற்​றும் ஷேக் கலிபா பாலம், சவுதி அரேபி​யா​வை​யும் – பஹ்ரைனை​யும் இணைக்​கும் தி கிங் பகத் பாலம், ஜோர்​டானில் உள்ள தி கிங் உசேன் பாலம், டா​மியா பாலம், மற்​றும் அப்​டான் பாலம் என 8 பாலங்களைத் தகர்க்​கப்​ போவ​தாக ஈரான்​ கூறி​யுள்​ளது.

Related Articles

Latest Articles