ஹட்டன் இபோச பணிமனையால் இயக்கப்படும் சமிமலை-ஹட்டன் மற்றும் காட்மோர்-மாஸ்கெலிய ஆகிய இரண்டு பாடசாலை பேருந்துகளும் ஒரு வாரமாக இயங்காததால், அப்பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பயணிகளுக்குப் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தினமும் காலை 06.30 மணிக்கு சமிமலை நகரத்திலிருந்து புறப்பட்டு மாஸ்கெலியா வழியாக ஹட்டனுக்குச் செல்லும் பேருந்தும், தினமும் காலை 06.15 மணிக்கு காட்மோரிலிருந்து புறப்பட்டு மாஸ்கெலியவுக்குச் செல்லும் பேருந்தும் இயங்காததால், பயணிகளுக்கும் அப் பகுதியில் இருந்து மஸ்கெலியா நகரில் உள்ள பாடசாலைகளுக்கும் மாவட்ட வைத்திய சாலைக்கும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்த இரண்டு பேருந்துகளும் ஒரு வாரம் இயக்கப்பட்டால், ஒரு மாதத்திற்கு இயங்காது என்ற சூழ்நிலையே காணப்படுகின்றது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்த இரண்டு பேருந்துகளும் தினமும் மஸ்கெலியா நகரத்தில் உள்ள சிங்கள, தமிழ் மற்றும் இஸ்லாமியப் பாடசாலைகளுக்கும், ஹட்டன் நகரத்தில் உள்ள பிரபல சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கும் ஏராளமான பாடசாலை மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஏற்றிச் செல்கின்றன.
மஸ்கெலியா மற்றும் டிக்கோயா அரசாங்க மருத்துவமனைகளில் நடைபெறும் மருத்துவ முகாம்களுக்கும் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் உள்ள மாதாந்த கிளிநிக் போன்ற வற்றிக்கு ஏராளமான பயணிகள் இந்தப் பேருந்துகளில் பயணிக்கின்றனர்.
ஹட்டன் பணிமனையிலிருந்து மாதாந்திர பயணச்சீட்டுகளில் பயணிக்கும் தங்கள் பிள்ளைகள், பேருந்துகள் பற்றாக்குறையால் கூடுதல் செலவில் தனியார் பேருந்துகளில் பயணிக்க வேண்டியுள்ளது என்றும், சரியான நேரத்தில் பாடசாலைrக்கு செல்ல முடியாததால் தங்கள் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் இப்பகுதி பெற்றோர்கள் கூறுகின்றனர்.
பேருந்துகள் இயக்கப்படாதது குறித்து ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபை முதல்வரிடம் நாங்கள் விசாரித்தபோது, பணிமனையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்குப் பற்றாக்குறை இருப்பதாக அங்குள்ள ஒரு மூத்த அதிகாரி கூறினார்.
சமிமலை-ஹட்டன் மற்றும் காட்மோர்-மாஸ்கெலியா வழித்தடங்களில் இரண்டு இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளையும் உடனடியாக இயக்கத் தொடங்கி, தங்களுக்குப் பொதுப் போக்குவரத்து வசதிகளை வழங்குமாறு இப்பகுதி பயணிகள் மத்திய அரசின் போக்குவரத்து அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்
