” நல்லாட்சியின்போது அமைச்சர் திகாம்பரத்தால் முன்னெடுக்கப்பட்ட இந்திய வீடமைப்புத் திட்டங்கள் தோட்டத்தொழிலாளர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கவில்லை.” – என்று முன்னாள் அமைச்சர் திகாம்பரத்தின் பிரத்தியேக செயலாளர் சுப்பையா கமலநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” கொட்டகலை பிரதேசத்தில் இடம்பெற்ற பிரசார கூட்டமொன்றில் இந்திய வீடமைப்பு தோட்ட தொழிலாளர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்ததாக ஜீவன் தொண்டமான் கூறியிருந்தார். அது முற்றிலுமான தவறு.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சுயநல அரசியலுக்காக இந்திய வீடமைப்பு திட்டத்தினை நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தியது. எனவே, வீடமைப்பு திட்டம் பற்றி கதைப்பதற்கு அவர்களுக்கு எவ்வித அருகதையும் இல்லை.
அமைச்சர் பழனி திகாம்பரம், காணியுரிமையினை பெற்று கொடுத்த பின்னரே இந்திய வீடமைப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
குறிப்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தங்களின் அரசியல் இருப்புக்காக நுவரெலியா, பதுளை மாவட்டங்களுக்கு மட்டும் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த வீடமைப்பு திட்டத்தை நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, மொனராகலை என மலையக மக்கள் வாழும் பகுதிகளுக்கு எமது தலைவர் திகாம்பரம் விஸ்தரித்தார்.
10,000 இந்திய வீடமைப்பு திட்டத்தினை களுத்துறை, மாத்தறை, காலி, குருனாகல் உள்ளடங்களாக 12 மாவட்டங்களில் முன்னெடுக்க ஆரம்ப கட்ட பணிகளை முன்னெடுத்தார்.” -என்றார் சுப்பையா கமலநாதன்