தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யுடன் இலங்கைத் துணைத் தூதுவர் சந்திப்பு

தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யை , தென்னிந்தியாவுக்கான இலங்கைத் துணைத் தூதுவர் டாக்டர் கணேசநாதன் கதீஸ்வரன் இன்று நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சென்னையிலுள்ள தமிழக அரசுத் தலைமைச் செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டதோடு, இலங்கைத் துணைத் தூதுவரினால் முதலமைச்சருக்கு மலர்க்கொத்து வழங்கி வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டன.

Related Articles

Latest Articles