ஒரு சமூகமும் பின்தங்கியதாக உணர்ந்தால், ஒரு நாடாக நாம் முன்னேற முடியாது. ஒவ்வொரு குடிமகனின் மரியாதையும் பாதுகாப்பையும் காப்பதானது நம்மில் ஒவ்வொருவரின் பொறுப்பாகும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
நீலகாமம் மக்களுக்கு நீதி கோரியும், மலையக மக்களுக்கான காணி உரிமையை வலியுறுத்தியும் கொழும்பில் நேற்று போராட்டம் நடைபெற்ற நிலையிலேயே, நாமல் ராஜபக்ச இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவரது அறிக்கை வருமாறு ,
‘கஹவத்தை நீலகாமத்தில் நடைபெற்ற சம்பவத்தை நாம் கடுமையாக கண்டிக்கிறோம். அங்கு ஒரு பெருந்தோட்டத் தொழிலாளியின் வீடு இடிக்கப்பட்டதுடன், அடையாளம் தெரியாத சிலரால் அவர் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
யாரும் தங்களின் வீட்டை இழப்பதற்கோ அல்லது வன்முறையை எதிர்கொள்வதற்கோ பயத்தில் வாழ வேண்டிய நிலைமை இருக்கக்கூடாது.
பல தலைமுறைகளாக மலையக பெருந் தோட்டத் தொழிலாளர்கள் இந்த நாட்டிற்கு பெரும் பங்களிப்பு செய்துள்ளனர். இருந்தாலும், அவர்களில் பலர் இன்னும் பாதுகாப்பு, மரியாதை மற்றும் தங்களுக்கென சொந்தமாகக் கூறக்கூடிய ஒரு வீட்டைப் போன்ற அடிப்படை உரிமைகளுக்காக இன்றும் காத்திருக்கின்றனர்.
அரசாங்கம் தாமதமின்றி தலையிட்டு, நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணையை நடத்தி, பொறுப்புக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.
மக்களுக்கு நீதி உண்மையானது என்றும், அவர்களின் குரல் கேட்கப்படுகிறது என்றும் உணர முடியும் வகையில் செயல்பட வேண்டும்.
நீலகாமம் சம்பவம், வீடமைப்பு மற்றும் காணி உரிமைகள் போன்ற நீண்டநாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதில் நாம் தொடர்ந்து தாமதிக்க முடியாது என்பதை நினைவூட்டுகிறது. இந்தக் குடும்பங்கள் நிலைத்தன்மை, அங்கீகாரம் மற்றும் மரியாதைக்கு தகுதியானவர்கள்.
ஏதேனும் ஒரு சமூகமும் பின்தங்கியதாக உணர்ந்தால், ஒரு நாடாக நாம் முன்னேற முடியாது. ஒவ்வொரு குடிமகனின் மரியாதையும் பாதுகாப்பையும் காப்பதானது நம்மில் ஒவ்வொருவரின் பொறுப்பாகும்.










