கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்துள்ளார்.
மதுபானம் மற்றும் ஹாக்கி மட்டைகள் (hockey sticks) போன்ற அன்றாட நுகர்வோர் பொருட்கள் முதல் சிமெண்ட் போன்ற தொழில்துறை பொருட்கள் வரை இதில் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், ஆற்றல் (energy), பொட்டாஷ் (potash), முக்கிய கனிமங்கள் மற்றும் மீன் போன்ற சில முக்கிய ஏற்றுமதி பொருட்களுக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலளித்த கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), வரவிருக்கும் வாரங்களில் அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்த கனடா தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த வரிகள் இன்னும் 30 நாட்களில் அமலுக்கு வரும் என்றும், இது வடஅமெரிக்க நாடுகளுக்கு இடையிலான வர்த்தக பதற்றத்தில் ஒரு முக்கிய தீவிரத்தை குறிக்கிறது என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
“கனடா-அமெரிக்கா-மெக்சிகோ ஒப்பந்தத்தை நேரடியாக மீறி அமெரிக்கா வரி விதித்ததில் இருந்து தொடங்கிய தொடர்ச்சியான ஒருதலைப்பட்ச வர்த்தக நடவடிக்கைகளில் இது சமீபத்தியதாகும்” என்று கார்னி ‘X’ தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் “கனடாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இது கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற டிரம்பின் கோரிக்கையைக் குறிப்பதாக இருக்கலாம்.
இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே இருக்கும் வர்த்தகத் தடைகளின் தொடர்ச்சியாகவே திங்கள்கிழமை அறிவிக்கப்பட்ட இந்த இறக்குமதி வரிகள் அமைந்துள்ளன.










