சீரற்ற காலநிலை: நுவரெலியாவில் 93 குடும்பங்கள் பாதிப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் 4 மாவட்டங்களில் 146 குடும்பங்களைச் சேர்ந்த 678 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (23) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளத்தால் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

93 குடும்பங்களைச் சேர்ந்த 459 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

20 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.

Related Articles

Latest Articles