ஈரான்மீதான தாக்குதலை இடைநிறுத்தியது அமெரிக்கா: பின்னணி என்ன?

அமெரிக்காவின் தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போதிலும், செங்கடல் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள சவுதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதேவேளை, காஸ்பியன் கடலில் உள்ள தனது வணிகக் கப்பல் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இதனால், வார இறுதியில் ஈரான் போர் மேலும் விரிவடைந்துள்ளது.

ஈரானுக்கு எதிரான தனது கடற்படை முற்றுகை முழுமையாக அமலில் உள்ளதாக சனிக்கிழமை தெரிவித்த அமெரிக்க இராணுவம், தொடர்ந்து 13 இரவுகள் நடத்திய தீவிரத் தாக்குதல்களை ஏன் திடீரென நிறுத்தியது என்பது குறித்த விளக்கத்தை அளிக்கவில்லை.

அதேபோன்று, அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக அண்டை நாடுகள் மீது ஈரான் தினமும் நடத்தி வந்த தாக்குதல்கள் எதுவும் இந்த வார இறுதியில் பதிவாகவில்லை.

இந்தத் தாக்குதல் நிறுத்தம் குறித்துக் கேட்கப்பட்டபோது, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “அதிபர் ட்ரம்ப் எப்போதுமே இராஜதந்திர பேச்சுவார்த்தைகளையே விரும்புகிறார். எனினும், ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வரத் தவறினால் என்ன நேரும் என்பதை அவர் அவர்களுக்கு உணர்த்தியுள்ளார்,” என்று கூறினார்.

ஈரான் மீதான தாக்குதல்களை விரிவுபடுத்தும் திட்டத்தில் இருந்து அதிபர் ட்ரம்ப் தற்போதைக்கு பின்வாங்கியுள்ளதாக, இந்த விவாதம் குறித்து அறிந்த இருவரை மேற்கோள் காட்டி ‘நியூயார்க் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

போரை விரிவுபடுத்துவது, ஆயுதப் இருப்பைக் குறைப்பது, மத்திய கிழக்கு வளைகுடா நட்பு நாடுகளின் உறவைப் பாதிப்பது மற்றும் உலகளாவிய எரிபொருள் விநியோகம் மற்றும் பொருளாதாரத்தைப் பாதிப்பது போன்ற அச்சங்கள் அதிபருக்கும் அவரது ஆலோசகர்களுக்கும் உள்ளதாக அந்நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தின் போது, அமெரிக்காவின் வெடிமருந்து இருப்பு குறித்து அதிபர் ட்ரம்பியிடம் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் (JD Vance) மற்றும் கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் டான் கெய்ன் (Gen. Dan Caine) ஆகியோர் கவலை வெளியிட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் சி.என்.என் (CNN) செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பாதுகாப்புத் துறை மூலத்தின்படி, இராணுவ நடவடிக்கைகள் தற்போது “நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக” சி.என்.என் தெரிவித்துள்ளது.

வளைகுடாப் பகுதியில் தற்காலிக அமைதி நிலவினாலும், சவுதி அரேபியாவுக்கும் ஈரானின் நட்புச் சக்தியான ஹவுதிகளுக்கும் இடையே சனிக்கிழமை இடம்பெற்ற மோதலானது, ஏற்கனவே ஹோமுஸ் ஜலசந்தி வழியிலான எரிபொருள் விநியோகத்தைப் பாதித்துள்ள இந்தப் போர், இரண்டாவது முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையையும் பாதிக்கலாம் என்பதையும் ஏமனின் உள்நாட்டுப் போரை மீண்டும் தூண்டலாம் என்பதையும் காட்டுகிறது.

தனிப்பட்ட ஒரு சம்பவமாக, காஸ்பியன் கடலில் இருந்த ஈரானிய வணிகக் கப்பல் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் மாலுமி ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றொருவர் காயமடைந்துள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது.

இந்த “பகைமை மற்றும் குற்றச் செயலுக்கு” எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தெஹ்ரானில் உள்ள உக்ரைன் தூதரக அதிகாரியை ஈரானிய வெளியுறவு அமைச்சு அழைத்துக் கண்டனம் தெரிவித்ததாக ஐ.ஆர்.என்.ஏ (IRNA) அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இலக்குகளைத் தாக்குவதற்கு ஏதுவாக, ரஷ்யா தனது செயற்கைக்கோள் கண்காணிப்புத் தரவுகளை ஈரானுக்கு வழங்கி வருவதை கவனித்துள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்த அதேவேளையில், ஈரானின் இந்தக் குற்றச்சாட்டும் வெளியாகியுள்ளது.

ஏமனுக்கும் பரவும் அபாயத்தில் போர்

சவுதி அரேபிய அரசுக்குச் சொந்தமான அராம்கோ (Aramco) நிறுவனத்தின் ஜிசான் (Jizan) மற்றும் யான்பு (Yanbu) நகரங்களில் உள்ள தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஹவுதி இராணுவப் பேச்சாளர் யஹ்யா சாரீ தெரிவித்துள்ளார்.

ஏமன் எல்லைக்கு அருகில் உள்ள ஜிசான் பகுதியில் உள்ள அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் திசையிலிருந்து அதிக அளவிலான புகை மேலெழும் காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இந்தச் சுத்திகரிப்பு நிலையம் நாளொன்றுக்கு 4,00,000 பேரல் கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டது.

ஜிசானில் உள்ள எரிபொருள் மற்றும் எண்ணெய் சேமிப்பு மையங்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக ஆசியாவைச் சேர்ந்த வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், இது குறித்து அராம்கோ நிறுவனம் உடனடியாக எந்தக் கருத்துரையும் வழங்கவில்லை.

அதேவேளை, யான்பு நகரில் உள்ள எண்ணெய் உற்பத்தி மையங்களை இலக்கு வைத்து ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகள் வழியிலேயே இடைமறித்து அழிக்கப்பட்டன. ஈரான் முற்றுகையிட்டுள்ள ஹோமுஸ் ஜலசந்தியைத் தவிர்த்து, சவுதி அரேபியாவின் முக்கிய செங்கடல் எண்ணெய் ஏற்றுமதி மையமாக யான்பு துறைமுகம் திகழ்கிறது.

ஏமனில், ஹவுதிகளுக்கு எதிராக ஒரு தசாப்தத்திற்கும் மேலாகப் போராடி வரும் சவுதி ஆதரவு பெற்ற, சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசாங்கத்தின் விமானப்படை, மாரிப் (Marib) மற்றும் அல்-ஜவ்ஃப் (al-Jawf) மாகாணங்களில் உள்ள ஹவுதிகளின் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏமன் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் முன்னணி எல்லைகளில் தமது படைகளைத் திரட்டி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் ஆதரவுப் படைகள் ஏமனின் தலைநகர் சனாவைக் கைப்பற்றியதிலிருந்து, சவுதி அரேபியா தலைமையிலான அரபுப் படைகளின் கூட்டணி ஹவுதிகளுக்கு எதிராகப் போராடி வருகிறது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் பஞ்சத்தினாலும் மோதல்களினாலும் கொல்லப்பட்ட ஏமன் உள்நாட்டுப் போர், 2022 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு அமைதியடைந்தது.

எனினும், ஐந்து மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலினால் ஈரான் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானிய கூட்டாளிகளுடன் ஹவுதிகளும் இந்த விரிவான போரில் இணைந்ததால், அந்தப் போர் நிறுத்தம் இந்த மாதம் முடிவுக்கு வந்தது.

கடந்த வாரம் சவுதி அரேபியா மீது கடற்படை முற்றுகையை அறிவித்த ஹவுதித் தலைவர் அப்துல் மாலிக் அல்-ஹவுதி, சவுதியின் அனைத்து எண்ணெய் உற்பத்தி மையங்களும் தமது இலக்குகளாக மாறக்கூடும் என எச்சரித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles