சம்பள உயர்வு விவகாரத்தில் தற்போது,“பூச்சாண்டி” காட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆறு மாதங்களுக்கு முன்பிருந்து முன்வைக்கப்பட்டிருந்த ஆயிரம் ரூபா சம்பள உயர்வு தற்போதைய நிலைக்கு போதுமானதல்ல – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.
வேட்பாளர் வடிவேல் சுரேஸ், பதுளையில் தமது வாசஸ்தலத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது, அவர் கருத்துத் தெரிவிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில்,
“அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வாழ்வாதார செலவு உயர்வு ஆகியவற்றை ஈடுசெய்ய இவ் ஆயிரம் ரூபா சம்பள உயர்வினால் முடியாது. இது குறித்து, எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் நேரடியாக தெளிவுப்படுத்தியுள்ளேன்.
தேர்தலுக்குப் பின் சஜித் பிரேமதாச பிரதமரானதும், வாழ்க்கைச் செலவு உயர்விற்கமையவும், அவர் ஏற்கனவே கூறிய 1500 ரூபா என்ற சம்பள உயர்விற்கு அப்பால் நியாயமான சம்பள உயர்வை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பேன்.” – என்றார்.