இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது T-20 போட்டியில், கடைசி ஓவரில் Rovman Powell அடித்த சிக்ஸர் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணி தரப்பில் கமிந்து மெண்டிஸ் அதிகபட்சமாக 51 ஓட்டங்ளையும் குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்களையும் சேர்த்தனர் .
மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர் மற்றும் ஷமார் ஜோசப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
148 ரன்கள் ஓட்டங்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, முதல் 6 ஓவர்களில் (Powerplay) அதிரடியாக 66 ஓட்டங்களைக் குவித்த போதிலும், அதன்பின்னர் ஓட்ட வேகம் கணிசமாகக் குறைந்தது.
இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. கடைசி கட்டத்தில் வெற்றிக்கு 20 பந்துகளில் 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பின்னர் அது 9 பந்துகளில் 9 ரன்கள் என்ற நிலைக்கு மாறியது.
எனினும், இறுதி ஓவரில் கேப்டன் ரோவ்மன் பவல் அடித்த சிக்ஸர் மூலம், இன்னும் 4 பந்துகள் மீதமிருக்கையில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றியைத் தன்வசப்படுத்தியது.
இதற்கு முன்னதாக நடைபெற்ற மழையினால் பாதிக்கப்பட்ட மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) தொடரை இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது.
அந்தத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், கடைசி இரண்டு போட்டிகளும் மழையினால் கைவிடப்பட்டன.
தற்போது டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், எஞ்சிய இரண்டு டி20 போட்டிகளும் முறையே சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஜமைக்காவின் கிங்ஸ்டனில் உள்ள சபினா பார்க் (Sabina Park) மைதானத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளன.










