ஐபிஎல் கிரிக்கெட் 2026 போட்டி தொடரில் இறுதி ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
நடப்பு சாம்பியனான ஆர்சிபி மற்றும் 2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
இரு அணிகளும் 2-வது முறையாக கோப்பையை வெல்லும் கனவுடன் களமிறங்குகின்றன.
லீக் சுற்றில் ஆர்சிபி அணி முதலிடம் பிடித்து அசத்தியிருந்தது. தொடர்ந்து தகுதி சுற்று 1-ல் குஜராத் டைட்டன்ஸ் அணியை 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றிருந்தது.
மறுபுறம் முதல் வாய்ப்பை தவறவிட்ட குஜராத் அணி தகுதி சுற்று 2-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்துள்ளது.
புள்ளிவிவரப்படி நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி, 2022-ம் ஆண்டு கோப்பையை வென்ற குஜராத் அணிக்கு எதிராக வெற்றி பெற அதிக வாய்ப்புள்ள அணியாகக் கருதப்படுகிறது.
இதற்கு ஆர்சிபி அணி இந்தத் தொடரில் இதுவரை விளையாடி வரும் அதிரடி ஆட்டமுறையே முக்கியக் காரணமாகும்.
