இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (03) நடைபெறவுள்ளது.
ஜமைக்காவின் சபினா பார்க் மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 08 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.
2027 உலகக் கோப்பைத் தகுதியை இலக்காகக் கொண்டு நடைபெறும் இப்போட்டிகள், தரவரிசையில் முன்னேறுவதற்கு இரு அணிகளுக்கும் மிக முக்கியமானவை.
குசல் மெண்டிஸ் இலங்கை அணியின் தலைவராக மீண்டும் பாறுப்பேற்றுள்ள நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் அணி நட்சத்திர வீரர் ஷாய் ஹோப்பின் சிறப்பான ஆட்டத்தை பெரிதும் நம்பியுள்ளது.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜமைக்காவின் சபினா பார்க் மைதானத்தில் இந்த இரு அணிகளும் மோதுவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரு அணிகளும் சமமான வெற்றிப் பதிவுகளைக் கொண்டிருந்தாலும், சமீபத்திய போட்டிகளில் இலங்கை அணி சற்று கூடுதல் பலத்துடன் காணப்படுகிறது.
3 போட்டிகளைக்கொண்ட ஒருநாள் தொடரில் 2ஆவது போட்டி ஜுன் 07 ஆம் திகதியும், இரண்டாவது போட்டி ஜுன் 9 ஆம் திகதியும் நடைபெறும்.
