அட்டன் – டயகம வீதியில் இன்று காலை பேருந்து விபத்தொன்று நிகழ்ந்ததில் 52 பேர் காயமடைந்தனர். குறித்த வீதி விஸ்தரிக்கப்படாமையினால் இந்த வீதியில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.
எனினும், இந்த வீதியை விஸ்தரிப்பதற்கான திட்டங்கள் இருந்த போதிலும், ஐந்து நிறுவனங்கள் இந்த வீதி புனரமைப்பிற்காக ஒத்துழைக்க வேண்டியிருந்ததால் இந்தப் பணிகளில் கால தாமதம் ஏற்பட்டிருந்தது.
அக்கரபத்தை பிரதேச சபை, நோர்வூட் பிரதேச சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை, பெருந்தோட்டத்துறை கம்பனி நிறுவனம் ஆகிய ஐந்து நிறுவனங்களில் இதில் தொடர்புபட்டிருந்ததால் இந்த வீதியின் விஸ்தரிப்புப் பணிகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன.
எனினும், இன்று விபத்து நிகழ்ந்தை அடுத்து ஆளுநரின் தலையீட்டில் இதற்கான விஸ்தரிப்புப் பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய மாகாண ஆளுநருடன், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இன்று காலை சந்தித்து பேச்சு நடத்திய பின்னர், ஆளுநர் இதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.