அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ராஜினாமா!

சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பான இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார் எனவும் தெரியவருகின்றது.

கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக பதவி வகித்தபோது மருந்து கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கெஹலிய தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றார்.

கெஹலிய ரம்புக்வெல்ல பதவி விலக வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்திவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles