‘அமைச்சு பதவிகளை துறந்து அரசிலிருந்து வெளியேற சு.க. முடிவு’

” நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளை உள்ளடக்கி இடைக்கால அரசு அமைக்கப்படாவிட்டால், அமைச்சு பதவிகளை துறந்து அரசிலிருந்து வெளியேறுவோம்.”

இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானம் எடுத்துள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்றிரவு கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு நாளை கடிதம் அனுப்பிவைக்கப்படவுள்ளது.

Related Articles

Latest Articles