” கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவிவரும் சூழ்நிலையில் பொதுமக்கள் அலட்சியத்துடன் செயற்படக்கூடாது. சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி அவதானத்துடன் செயற்படவேண்டும்.” – என்று பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் முன்னாள் தலைவரும், இ.தொ.காவின் உபசெயலாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மலையக பெருந்தோட்டப் பகுதிகளுக்கும் கொரோனா பரவியுள்ளது. ஹட்டன், மஸ்கெலியா, கொத்மலை, நுவரெலியா, கினிகத்தேன மற்றும் அக்ககரப்பத்தனை போன்ற பகுதிகளில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். எனவே சுய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அனைவரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவேண்டும்.
அதுமட்டுமல்லாமல் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசணையில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியமும் இராணுவமும் இணைந்து விசேட செயலணி ஊடாக வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்தாலும் ஒருசிலர் பரிசோதனைக்காகு ஒருசிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
எனவே உங்களின் சுயபாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியம் அதுமட்டுமல்லாது முதலாவது அலையை அலட்ச்சியப்படுத்தியதாலேயே இன்று பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்க வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டுள்ளோம்.
தற்போது அமைச்சர் ஜீவன் தொண்டமான் அமைச்சின் ஊடாக தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். எனவே கட்சி பேதமின்றி அனைவரும் ஒத்துழைப்பாக செயற்படுவோம்.” – என்றார் பாரத்.
தகவல் : நீலமேகம் பிரசாந்த்
