அலரிமாளிகை சந்திப்பில் திருப்தி இல்லை! ஜனாதிபதியை சந்திக்கும் பங்காளிகள்!!

கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலைய விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனும் பேச்சு நடத்துவதற்கு ஆளுங் கூட்டணியிலுள்ள பங்காளிக் கட்சி தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. தொழிற்சங்கங்களும் போர்க்கொடி தூக்கியுள்ளன.

அத்துடன் கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் உரிமம் இலங்கை வசமே இருக்க வேண்டும் என மொட்டு அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் 11 பங்காளிக்கட்சிகள் முடிவெடுத்திருந்தன.

இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை இன்று மாலை சந்தித்து பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் பேச்சு நடத்தினர். அலரிமாளிகையில் நடைபெற்ற சந்திப்பில் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவும் பங்கேற்றார்.

இச்சந்திப்பின்போது இறுதி இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை. எனவே, ஜனாதிபதியை சந்தித்து பேச்சு நடத்துவதற்கு பங்காளிக்கட்சி தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

” இன்றைய சந்திப்பில் பிரதமர் நடுநிலை வகித்தார். எமது தரப்பு கருத்தை முன்வைத்தோம். ஜனாதிபதியையும் சந்திக்கவுள்ளோம்.” -என்று அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

அமெரிக்க நிறுவனத்துக்கு 40 வீத பங்குகளே வழங்கப்படும். அதுவும் 15 ஆண்டுகளுக்கு. இதன்மூலம் குறைந்த விலையில் மின்சாரத்தை பெறமுடியும் என பொதுஜன பெரமுன கட்சி குறிப்பிட்டுள்ளது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles