இ.தொ.காவின் எதிர்கால திட்டங்கள் குறித்து பிரதேச சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்!

 

-தலைவர், பொது செயலாளர் உட்பட உயர்பீட உறுப்பினர்கள் பங்கேற்பு –

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமை காரியாலயமான சௌமியபவனில், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி இராமேஸ்வரன் ஆகியோரின் முன்னிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரசால் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்கள் குறித்து புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

இக்கலந்துரையாடலின் போது, உள்ளூராட்சி மன்றத்தால் மேற்கொள்ளப்படும் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ்,பிரதி தவிசாளர் ராஜதுரை, சட்ட ஆலோசகர் மாரிமுத்து ஆகியோர் மேற்பார்வை செய்வதோடு, மக்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்குமாறு இவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்கள் மேற்கொள்ளும் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்கள் ஆய்வுக்குட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Related Articles

Latest Articles