இரண்டு நாள் பயணமாக இன்று இலங்கைக்கு வரவிருந்த இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம் நேற்று கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.
இந்தியத் தூதரகம் நேற்றிரவு வெளி யிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரி விக்கப்பட்டுள்ளது. இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ் நாத் சிங், இருதரப்பு பாதுகாப்பு உறவு களை மீளாய்வு செய்வதற்காக இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்தார்.
இரண்டு தினங்கள் அவர் இலங்கை யில் தங்கியிருப்பார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
‘தவிர்க்க முடியாத காரணங்களினால் அவரின் விஜயம் ஒத்திவைக்கப்பட்டதாக’ இப்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ‘ஷி யாங் – 6’ என்ற தனது ஆராய்ச் சிக் கப்பலை கொழும்பில் தரிப்பதற் கும் இலங்கைக் கடலில் ஆய்வு மேற் கொள்வதற்கும் சீனா வைத்த கோரிக்கைக்கு இணங்கிச் செயற்பட கொழும்பு விருப்பம் காட்டியுள்ள நிலையில்,பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்சனிக்கிழமை(இன்று) முதல் இரண்டு
நாள்களுக்கு ‘பாதுகாப்பு உறவுகளைமறுபரிசீலனை செய்ய” இலங்கைக்கு
விஜயம் செய்யவுள்ளார் என முன்னர் அறிவிக்கப்பட்டிதுந்தது.










