” உள்ளாட்சிசபைத் தேர்தலுக்கான திகதியை தேர்தல் ஆணைக்குழு உடன் அறிவிக்க வேண்டும்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் வலியுறுத்தினார்.
தேர்தலுக்கான நிதியை முடக்க முடியாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டதால், நிதி அமைச்சின் செயலாளருடன் பேச்சு நடத்த வேண்டிய அவசியம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
