இம்ரான் கானுக்கு 8 நாட்கள் விளக்கமறியல்: நீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தான் முன்ளாள் பிரதமர் இம்ரான் கானை 8 நாட்கள் விளக்கமறியலில் வைத்து விசாரிப்பதற்கு அந்நாட்டின் நீதிமன்றமொன்று இன்று அனுமதி வழங்கியது.

அல் காதிர் நம்பிக்கை நிதியம் தொட்ரபான வழக்கில் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில்  இம்ரான் கான் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரிப்பதற்காகவே அவர் விளக்கமறியலில் வைக்கப்படடுள்ளார்.

 நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்ட இம்ரான் கான், இஸ்லாமாபாத்தில் பொலிஸ் தலைமையகத்திலுள்ள விசேட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

இம்ரான் கானை  14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க வேண்டும் என  தரப்பு சட்டத்தரணிகள் கோரினர்.

இதற்கு இம்ரான் கானின் சட்டத்தரணி தெரிவிப்பு தெரிவித்தார்.

இம்ரான் கான் கைது செய்யப்பட்டபோது, பிடியாணை ஆவணம் அவருக்கு காண்பிக்கப்பட்டது என தேசிய பொறுப்புல் கூறல் பணியகத்தின் (என்ஏபி) சட்டத்தரணி கூறினார்.

ஆனால், இம்ரான் கான் கைது செய்யப்பட்டபோது அவருக்குப் பிடியாணை காண்பிக்கப்படவில்லை எனவும் என்ஏபி அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே அந்த ஆவணம் காண்பிக்கப்பட்டது எனவும் இம்ரான் கானின் சட்டத்தரணி கூறினார்.

இறுதியில் இம்ரான் கானை 8 நாட்கள் விளக்கமறியலில் வைத்து விசாரிப்பதற்கு பொறுப்புக்கூரல் பணியகத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இம்ரான் கான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அனுமதியளிக்கப்பட்டவர்கள் மாத்திரமே நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்படுவர் என இஸ்லாமாபாத் பொலிஸார் அறிவித்திருந்தனர். நீதிமன்றத்துக்கு அருகிலுள்ள வீதிகள் மூடப்பட்டிருந்தன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles