“ இலங்கையால் நிச்சயம் மீண்டெழ முடியும். அதற்கான தலைமைத்துவத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வழங்கும்.” – என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்கம்மீது நம்பிக்கை இருப்பதாலேயே சர்வதேச உதவிகள் கிடைக்கப்பெறுகின்றன. இவ்வாறான உதவிகள்மூலம் இருந்த நிலையைவிடவும் சிறந்த நிலைக்கு வரமுடியும் எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, ஊடக அடக்குமுறை தொடர்பில் அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்தார்.










