இலங்கைக்கு தேயிலை பயிர் செய்கையை அறிமுகப்படுத்திய ஜேம்ஸ் டெய்லர் என்பவரின் 186 ஆவது ஜனன தினம் நேற்றாகும். இதனை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதன்படி முதன்முதலில் தேயிலை பயிரிடப்பட்ட லுல்கந்து எனும் இடத்தில் வைத்து ஜேம்ஸ் டெய்லரை நினைவுகூரும் வகையில் கேக் வெட்டப்பட்டது. அதன்பின்னர் ஜேம்ஸ் டெய்லரின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
கொண்டகலை பகுதியில் பரசூட் சாகசமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தோட்ட நிர்வாகமும், தொழிலாளர்களும் இணைந்தே நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
கலகா நிருபர் – ரம்யா










