இஸ்ரேல் இராணுவத்தின் உளவு பிரிவு தலைவரான அஹ்ரோன் ஹலிவா தனது பதவியை திடீரெனெ இராஜினாமா செய்துள்ளார்.
காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர ஒரே நாளில் ஆயிரத்து 200 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 250 பேரை பணய கைதிகளாக அவர்கள் கடத்திச் சென்றனர்.
இதனையடுத்து காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. போர் 6 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையல் இஸ்ரேல் இராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் அஹ்ரோன் ஹலிவா திடீரெனெ இராஜினாமா செய்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் இயக்கத்தினர் நடத்திய தாக்குதலை தடுக்க தவறியதாக அஹ்ரோன் மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில், தனது பதவியில் இருந்து அவர் விலகியுள்ளார்.