‘ஈராண்டுகளில் ஓய்வுபெறும் திட்டம் இல்லை’ – பிரதமர் மஹிந்த அறிவிப்பு!

” இன்னும் இரண்டு ஆண்டுகளில் அரசியலில் இருந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஓய்வுபெறவுள்ளார்.” என வெளியான தகவல்களை பிரதமர் நிராகரித்துள்ளார்.

ஐந்தாண்டுகளுக்கு பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கே மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். எனவே, அக்காலப்பகுதிக்கு முன்னர் ஓய்வுபெறும் திட்டம் எதுவும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஈராண்டுகளில் அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள்ளார் எனவும், அவரின் இடத்துக்கு மற்றுமொரு ராஜபக்ச நியமிக்கப்படுவார் எனவும் அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ச குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

Related Articles

Latest Articles