கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை , 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியன ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையில் நடைபெறும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (7) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
” கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை , 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியன ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திகதிகளில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக நடத்தப்படும். பரீட்சைகள் ஒத்திவைக்கப்படாது.