2020 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவு திட்ட அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. நபருக்கு அல்லாமல் இம்முறை அமைப்புக்கு நோபல் பிரிசு கிடைத்துள்ளது.