கொஸ்லந்த ஊவா மாவெலகம பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (28) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஊவா மாவெலகம, கம்பஹா, மதுகஸ்தலாவ பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொஸ்லந்த பொலிஸாருக்கு நபர் ஒருவரின் வீட்டில் துப்பாக்கி இருப்பதாக கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பிற்கு அமைய பொலிஸார் குறித்த வீட்டை சுற்றி வளைத்து தேடுதல் மேற்கொண்ட போது
வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை போலிஸார் கண்டுபிடித்துள்ளனர் .
பதுளை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் உபுல் சந்தன, பண்டாரவளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் . பிரதீப் களுபஹனவின் பணிப்புரையின் பேரில் கொஸ்லந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி .பிரபோப டபிள்யூ. விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினரால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா