கடும் மழை – இடிந்து விழுந்தது சுவர்! நோர்வூட்டில் ஐவர் பாதிப்பு

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட இன்வெரி  தோட்டத்தில் தோட்டத்தில் தொழிலாளர்களின் குடியிருப்புமீது சுவர் இடிந்து விழுந்ததால் வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால் ஐவர் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் நேற்று மாலை கடும் மழை பெய்துள்ளது. இதன்போதே குறித்த அனர்த்தமும் இடம்பெற்றுள்ளது.

அனர்த்தத்தின்போது தெய்வாதீனமாக எவருக்கும் உயிர் ஆபத்தோ காயங்களோ ஏற்படவில்லை.

குடியிருப்பில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக இன்வெறி தோட்ட நிர்வாகத்திற்கு குடியிருப்பாளர்கள் அறிவித்த போதிலும், அது தொடர்பில் தோட்ட நிர்வாகம் கவனத்தில் எடுக்கவில்லை.

சம்பவ இடத்திற்கு இன்று (13) நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.ரவி சென்று பார்வையிட்டதுடன், இவர்களுக்கு மனித வள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக வீடுகளை கட்டிக்கொடுக்க ஏற்பாடுகளை செய்யப்போவதாகவும் தெரிவித்தார்.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்

Related Articles

Latest Articles