கிரிஸ்புரோ அனுசரணையில் பாடசாலை கபடி குழு

கந்தளாய் மஹவெலிபுரம் பாடசாலையின் கபடி குழுவிற்கு அனுசரணை கிரிஸ்புரோ

இலங்கையில் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் தொடர்பில் சிறந்த கவனம் செலுத்தும் இந்த நாட்டிலுள்ள முன்னணி கோழி இறைச்சி தயாரிப்பு நிறுவனமான கிரிஸ்புரோ திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் மஹாவெலிபுரம் வித்தியாலயத்தின் கபடி குழுவிற்கு அனுசரணை வழங்குவதன் மூலம் அணி ஒட்டுமொத்த இலங்கையை வெற்றிபாதைக்கு கொண்டுசெல்ல முடிந்துள்ளது.

நீண்டகாலமாக யுத்தம் மற்றும் வரட்சியினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாக கருதப்படும் கந்தளாய் பிரதேசம் வறுமையினால் பாதிக்கப்பட்டிருந்தது. பல வருடங்களுக்கு முன்னர் கிரிஸ்புரோ நிறுவனம் கந்தளாய் சூரியபுரம் கிராமத்தில் பல்வேறு முதலீடுகளை மேற்கொண்டு நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்கி கிராமிய வறுமையை ஒழிப்பதற்காக நடவடிக்கை எடுத்ததுடன் கிராமத்திலுள்ள பிள்ளைகளின் விளையாட்டுத் திறமைகளை வெளியே கொண்டுவருவதற்கு அனுசரணையும் வழங்கி வருகின்றது. விசேடமாக கிரிஸ்புரோவின் சிந்தனையின் படி கிராமிய பொருளாதாரம், சமூக மேம்பாடுகளின் கீழ் மஹவெலிபுரம் பாடசாலையின் கபடி குழுவிற்கு பல வருடங்களாக அநுசரணை வழங்குவதற்கு கிரிஸ்புரோ நடவடிக்கை எடுதத்துள்ளது. இந்த அனுசரணையினால் கடந்த ஆண்டில் ஒட்டுமொத்த இலங்கை பாடசாலை மட்ட கபடி போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு மஹாவெலிபுரம் இளம் வீரர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்ததுடன் பாடசாலை மட்டத்திலிருந்துது தேசிய மட்டம் வரை பயணிப்பதற்கு மஹாவெலிபுரம் பாடசாலை கபடி குழு விளையாட்டு வீரர்களுக்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

கிரிஸ்புரோ அனுசரணை குறித்து கருத்து தெரிவித்த மஹாவெலிபுரம் பாடசாலையின் பிரதி அதிபர் எச்.எம். நவரத்ன, “கந்தளாய் மிகவும் பின்தங்கிய கிராமத்தில் அமைந்துள்ள மஹவெலிபுரம் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோரில் அதிகமானோர் விவசாயத்தை நம்பியுள்ளதுடன் வருடத்தில் பெரும்பாலான நாட்களில் நிலவும் வரட்சியினால் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். எனினும் மிகவும் குறைந்த வசதிகளின் கீழ் பாரிய உறுதியுடன் விளையாட்டில் ஈடுபடும் மாணவ அணியொன்று எம்மிடம் உள்ளது. இவர்களது திறமைகளுக்கு கிரிஸ்புரோ நிறுவனம் மதிப்பளித்ததன் விளைவாக பாடசாலை கபடி அணிக்கு பூரண அனுசரணையை பெற்றுக்கொடுக்க கிரிஸ்புரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த வருடம் அகில இலங்கை கபடி போட்டியில் வெற்றியை நோக்கிப் பயணிக்க முடிந்ததற்கு காரணம் கிரிஸ்புரோ நிறுவனத்தின் இந்த சிறந்த ஒத்துழைப்பே ஆகும்.” என தெரிவித்தார்.

இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த மஹாவெலி பாடசாலையின் விளையாட்டுகளுக்குப் பொறுப்பான ஆசிரியர் கலாநிதி மிலிந்த சம்பத் விக்ரமசிங்க, “கிரிஸ்புரோ நிறுவனத்தின் பூரண அனுசரணை கிடைத்ததுடன் கபடி அணிக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள், ஆடைகள், கிடைத்ததுடன் பயிற்சி அமர்வுகளுக்காக அனுசரணை, வீரர்களுக்கான உணவு மற்றும் போட்டிகளுக்கான போக்குவரத்து வசதிகள் போன்ற அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்குவதற்கு கிரிஸ்புரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. கிரிஸ்புரோ நிறுவனத்தினால் பெற்றுக் கொடுக்கப்பட்ட இந்த அனுசரணையின் கீழ் எதிர்காலத்தில் சர்வதேச மட்டத்தில் கபடி வீரர்களுக்கு கைகொடுப்பதற்காக இந்த நடவடிக்கையானது சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுக்குமென நான் நம்புகின்றேன்.” என தெரிவித்தார்.

“கிரிஸ்புரோ தாங்கள் நடைமுறைப்படுத்தியுள்ள பிரதேச பொருளாதார மற்றும் சமூக கலாச்சார தேவைகளை மேம்படுத்துவதற்காக கடந்த நீண்டகாலமாக பாரிய முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றது. விசேடமாக கிராமிய வறுமையை இல்லாதொழிப்பதற்கு மேலதிகமாக பிள்ளைகளின் விளையாட்டுத் திறமைகளை வெளிகொண்டுவரும் வகையில் அவர்களை தேசிய மற்றும் சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்வதற்காக பாரிய வேலைத் திட்டங்களை கிரிஸ்புரோவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கிரிஸ்புரோ நெக்ஸ்ட் சேம்ப் திட்டத்தினை தற்போது இலங்கை ஒலிம்பிக் சங்கத்திடுன் இணைந்து நாட்லுள்ள விளையாட்டு வீரர்களை சர்வதேச வெற்றியை நோக்கி எடுத்துச் செல்வதற்கான வேலைத்திட்டத்தினையும் ஆரம்பித்துள்ளது. கந்தளாய் மஹாவெலிபுரம் பாடசாலையின் கபடி வீரர்களுக்கான அனுசரணையை வழங்கும் கிரிஸ்புரோ நிறுவனம் சமூக பொறுப்புணர்வு நடவடிக்கையின் மற்றுமொரு பெறுமதியான சந்தர்ப்பமாக கருத முடியும்.” என கிரிஸ்புரோவின் சிரேஷ்ட விற்பனை முகாமையாளர் அமோரேஸ் செலர் தெரிவித்தார்.

1972ஆம் ஆண்டு வெறும் 100 கோழிக் குஞ்சுகளோடு தரமான மற்றும் சிறந்த படைப்புக்களை சந்தைப்படுத்தி மேலோங்கி நிற்கவேண்டுமென்ற விருப்பத்துடன் நிறுவப்பட்ட க்ரிஸ்ப்ரோ நிறுவனம் இலங்கையின் முதல் மற்றும் அதிநவீன முறையில் கோழி இறைச்சியை உற்பத்தி செய்து செங்குத்தாக உயர்ந்திருக்கும் ஒரு நிறுவனமாகும். இலங்கையில் முதலாவதாக அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தி முழுமையாக கணினி மயப்படுத்தி (vertically intergrated) தமது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.தமது கடின உழைப்பின் விளைவாக தற்போது பாரிய பண்ணைகள் மற்றும் தீவன ஆலைகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் தாரக மந்திரமான ஷபண்ணையிலிருந்து மேசை கரண்டி வரை| என்ற திட்டமே வெற்றிக்கு காரணியாகும். மேலும் இந்த வெற்றிக்கு நேரடி மற்றும் மறைமுக ஊழியர்கள், வெளிநாட்டவர்கள், உள்நாட்டு விவசாயிகள் மற்றும் இலங்கையிலுள்ள நுகர்வோர் ளஆகியோரும் காரணமானவர்கள் ஆவர்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles