‘கொரோனா’ வைரஸ் தொற்றால் இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 47 வயதுடைய பெண் ஒருவரே சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி கொரோனா தொற்றால் இலங்கையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இருந்து வந்த நிலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பெண்ணே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் புற்றுநோய் மற்றும் இருதய நோயாலும் பீடிக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.
