இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு 12 ஐ சேர்ந்த 54 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.