கொரோனாவால் 5 நாட்களுக்குள் 889 பேர் பலி – 17,940 பேருக்கு தொற்று!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் 5 நாட்களில் 889 பேர் பலியாகியுள்ளனர்.

ஆகஸ்ட் 15 முதல் 19 வரையான காலப்பகுதியிலேயே குறித்த மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதன்படி 15 ஆம் திகதி 167 பேரும், 16 ஆம் திகதி 171 பேரும், 17 ஆம் திகதி 170 பேரும், 18 ஆம் திகதி 186 பேரும், 19 ஆம் திகதி 195 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இக்காலப்பகுதியில்  17 ஆயிரத்து 940 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles