‘கொரோனா’வால் கடந்த 10 நாட்களில் 30 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் 2ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (10) 26 ஆயிரத்து 981 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 133 பேர் பலியாகியுள்ளனர். (ஒக்டோபர் 24 முதல் நேற்றுவரை)

மினுவாங்கொட கொத்தணிமூலம் 3 ஆயிரத்து 59 பேருக்கும், பேலியகொடை கொத்தணிமூலம் 23 ஆயிரத்து 922 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. இவர்கில் 18 ஆயிரத்து 922 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மாத்திரம் 538 பேருக்கு வைரஸ் தொற்றியது.

அதேவேளை, இலங்கையில் நேற்றுவரை மொத்தமாக 30 ஆயிரத்து 612 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 22  ஆயிரத்து 260 பேர் குணமடைந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நேற்றும் இருவர் உயிரிழந்தார். இதன்படி இலங்கையில் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். நவம்பரில் மாத்திரம் 98 பேர் உயிரிழந்துள்ளனர். டிசம்பரில் கடந்துள்ள 11 நாட்களில் 30 பேர் பலியாகியுள்ளனர்.

Related Articles

Latest Articles