நாட்டில் மேலும் 54 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. மே 10 முதல் மே 31 ஆம் திகதிவரை 15 பேரும் ஜுன் 2 முதல் ஜுன் 7வரை 39 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
32 ஆண்களும், 22 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 843 ஆக அதிகரித்துள்ளது.