கொரோனாவால் மேலும் இருவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 144 ஆக உயர்வு!!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 144 ஆக அதிகரித்துள்ளது.

2ஆவது அலைமூலம் இதுவரை 131 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, நாட்டில் இன்று மாத்திரம் 694 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 72 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 21 ஆயிரத்து 800 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 26 ஆயிரத்து 516 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles