கொரோனாவால் மேலும் ஐவர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 204 ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
நான்கு ஆண்களும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் மூவர் 60 வயதைக்கடந்தவர்கள்.

இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 204 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் 191 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவு உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

Related Articles

Latest Articles