‘கோப்’ குழுவின் தலைமைப்பதவியும் ஆளுங்கட்சி வசம்!

பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற்குழுவின் (கோப்) தலைவராக ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கோப் குழுவின் முதலாவது கூட்டம் இன்று (22) பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது. இதன்போதேபேராசிரியர் சரித்த ஹேரத்தின் பெயரை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே முன்மொழிந்ததுடன், இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர வழிமொழிந்தார்.

அதேவேளை, 22 உறுப்பினர்களைக்கொண்ட கோப் குழுவின் தலைவர் பதவி எதிரணிக்கு வழங்கப்படவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

Related Articles

Latest Articles